இதய நோயை தடுக்கும் கிரீன் டீயை பாலூட்டும் தாய்மார்கள் குடிப்பது நல்லதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
சென்னை: காபி, டீயை விட நன்மைகளை கொடுக்கும் கிரீன் டீயை தாய்ப்பால் ஊடும் தாய்மார்கள் சாப்பிடுவது நன்மையை ஏற்படுத்துமா என்பதை பார்ப்போம்.
காபி, டீ, பால் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை குடிக்கும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கும். ஆனால் இவற்றை குடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பால் வேண்டுமானால் குடித்துக் கொள்ளலாம். டீ, காபி அறவே கூடாது என்கிறார்கள். ஆனால் கிரீன் டீ குடிக்கும் கலாச்சாரம் தற்போது உள்ளது. இந்த டீயின் விலை சில நூறுகளில் இருந்து சில ஆயிரங்கள் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதாலும் கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும் என்பதால் இந்த டீயை பலர் குடித்து வருகிறார்கள். கிரீன் டீயில் காபின், காட்ஸின் மற்றும் டானின் ஆகிய மூலக்கூறுகள் இருப்பதால் இவை கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் கர்ப்பிணிகள் கிரீன் டீ சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.
அதே போல் பால் சுரப்பதை கிரீன் டீ குறைக்கும் என்பதால் குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த கிரீன் டீயை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது. மேலும் ரத்தசோகை, இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் கிரீன் டீயை தவிர்க்க வேண்டும் என்றும் செரிமான கோழாறு உள்ளவர்களும் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது.
மேலும் ஒரு சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும். எனவே கிரீன் டீ ஒத்துக் கொள்ளாதவர்கள் அதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள். மேலும் லெமன் கிராஸ், ஒரிகனோ, பார்ஸ்லீ, பெப்பர் மின்ட், ஜின்செங், கவா அன்டிலீசியம் வேரும் ஆகியவற்றையும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும்.
கிரீன் டீயால் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு எக்சிமா, ஆஸ்துமா, காய்ச்சல், உணவு ஒவ்வாமை உள்ளிட்டவை ஏற்படும். அதே வேளையில் கிரீன் டீ குடிப்பதால் உடலை நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். கிரீன் டீயில் இருக்கும் காப்பின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும். இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.
ஒரு நாளைக்கு 8 கப்புகள் வரை கிரீன் டீயை குடிக்கலாம். அதற்கு மேல் அதை குடிக்கக் கூடாது. கிரீன் டீயில் விட்டமின் இ இருப்பதால் தோலுக்கு நன்மையை கொடுக்கும். தோல் பிரகாசமாகும். தோலில் உள்ள இறந்த செல்களை நீங்கும். தோலுக்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications