பெண்கள் லெக்கின்ஸ் பேண்ட்களை அணிவதால் என்னென்ன பாதிப்பு? விளக்கும் டாக்டர் ஐசக் அப்பாஸ்
சென்னை: பெண்கள் டைட்டாக போடப்படும் லெக்கின்ஸ், யோகா பேண்ட்களை அணிவது சரியா என்பது குறித்து ஃபிட்னஸ் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த லெக்கின்ஸால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பது குறித்தும் அவர் கூறியுள்ளார். அப்படி அவர் என்னதான் கூறினார் என்பதை பார்க்கலாம்.
பெண்கள் பொதுவாக லெக்கின்ஸ், டைட்ஸ் எனப்படும் ஆடைகளை அணிகிறார்கள். முதலில் தொளதொளவென பேண்ட் அணியப்பட்டது, பிறகு பட்டியாலா என்றார்கள். அதன் பிறகு கேதரிங் டைப் பேண்ட்கள் தைக்கப்பட்டு வந்தன.

தற்போது பிளாசோ, குலோட்டீஸ் என விதவிதமான ஆடைகளை அணிகிறார்கள். இது பெண்களுக்கு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் இதில் ஆபத்துகள் நிறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான பேன்ட்களில் மிகவும் மட்டமான சிந்தடிக்குகளான பாலிஸ்டர், நைலான் மற்றும் ஸ்பான்டெக்ஸ் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இவை உரசி உரசி தோலுக்கு அழற்சியை ஏற்படுத்தும்.
இதுகுறித்து டாக்டர் ஐசக் அப்பாஸ் கூறியிருப்பதாவது: பெண்கள் லெக்கின்ஸ், யோகா பேண்ட்களை அணிவது சரியா, சரியில்லை என்றே நான் கூறுவேன். ஏனென்றால் யோனி, ஆசனவாய், தொடையின் இடுக்குகளில் பல்வேறு தொற்றுகளை இவை ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்யும் இளம் பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டே உடற்பயிற்சி செய்கிறார்கள்.
உள்ளே எவ்வளவு வியர்த்தாலும் அது வெளியே தெரியாது. இந்த டைட் லெக்கின்ஸ்களை சின்தடிக் ஃபைபர்களை கொண்டு இந்த நிறுவனங்கள் தயாரிக்கின்றன. காற்றுக் கூட இந்த துணியில் செல்லாது. இதனால் பாக்டீரியா, ஃபங்கஸ் போன்ற நுண்ணுயிரிகள் எளிதாக உள்ளே நுழைந்து அரிப்பு, வீக்கம், கொப்புளங்களை ஏற்படுத்தும்.

சில நிறுவனங்களோ இந்த ஆடைகள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் பை மற்றும் நான் ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் PFAS என்ற ஆபத்தான கலவையை சேர்க்கிறார்கள். இந்த கலவை வியர்வையில் கலந்து சிறுநீரகம் மற்றும் மார்பக புற்றுநோயை கூட ஏற்படுத்தும் வல்லமை படைத்தது என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பெண்கள் பருத்தியினால் நெய்யப்பட்ட ஆடைகளை சற்று தளர்வாக அணிவதே உத்தமம். பெண்கள் யாரும் என்னை தவறாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications