சிறுநீர் எந்த நிறத்தில் வருகிறது? "இந்த" கலரில் வந்தால் டேஞ்சர்! மருத்துவர் விளக்கம்
சென்னை: உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை சொல்லிவிடலாம்.
இதுகுறித்து டாக்டர் ஐசக் அப்பாஸ் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: என்னிடம் 5 பேரது சிறுநீர் உள்ளன. இதை வைத்து யாருக்கு என்ன பிரச்சினை என்பதை அறியலாம்.

அடிக்கடி மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வந்தால் ஒருவர் போதிய அளவுக்கு தண்ணீர் அருந்தாமல் இருக்கிறார் என்று அர்த்தம். அதே நேரத்தில் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அவருடைய கல்லீரலில் ஏதோ பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். அது மஞ்சள் காமாலையாகக் கூட இருக்கலாம்.
நுரையுடன் கூடிய சிறுநீர் வந்தால் குடல்களில் ஏற்படக் கூடிய பிரச்சினையாக இருக்கலாம் என்று அர்த்தம். சிறுநீர் குழாய்களில் ஏற்படும் தொற்றாகவும் இருக்கலாம். ரத்தம் போல் சிறுநீர் சிவப்பு நிறத்தில் இருந்தால் சிறுநீரகக் கல் அல்லது சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்பாகக் கூட இருக்கலாம். சிறுநீரக புற்றுநோயாகவும் இருக்கலாம்.
எந்த நிறமும் இல்லாமல் சிறுநீர் வருவதும் நல்லதல்ல! ஏனென்றால் அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் எந்த நிறமும் இல்லாமல் வெளியேறும். ஆரோக்கியமான சிறுநீரின் நிறம் வெளீர் மஞ்சள். அதாவது லேசான மஞ்சள் நிறம். இவ்வாறு டாக்டர் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் மருந்துகள் உட்கொண்டாலும் சிறுநீர் நிறம் மாறி வரும். இதை மருத்துவர் மருந்து கொடுக்கும் போதே சொல்லி அனுப்புவார்.
உடலில் நிகழும் சில மாற்றங்களையும் பல நோய் நிலைகளையும் கண்டறிய சிறுநீர் மாதிரி பயன்படுத்தப்படுகிறது. தினந்தோறும் சிறுநீர் வெளியேற வேண்டும். ஏதாவது பிரச்சினை என்றால் ஒரு அரை நாள் பரவாயில்லை. ஆனால் சிறுநீர் தினந்தோறும் வெளியேறினால்தான் உடலுக்கு நல்லது.
இல்லாவிட்டால் சிறுநீரகங்களில் ஏதோ பிரச்சினை என்பதை தெரிந்து கொள்ளலாம். இது போல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்பட்டாலும் மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம். மழைக் காலங்களில் அதிக அளவில் சிறுநீர் வெளியேறும். அது போல் சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகளுக்கும் நிறைய முறை சிறுநீர் வெளியேறும்.
மேலும் சிறுநீரை நீண்ட நேரத்திற்கு அடக்கவும் கூடாது. சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகம் இருக்கிறதா என்பது குறித்து கூட பரிசோதனை மூலம் அறியலாம். அது போல் கர்ப்பமாக இருந்தால் 40 நாட்கள் கழித்து சிறுநீரை எடுத்து சோதனை செய்தால் இரு கோடு வந்தால் கர்ப்பம். ஒரு கோடு வந்தால் கர்ப்பம் இல்லை என்று அர்த்தம். சிறுநீரில் சிலருக்கு புரதமும் வெளியேறும். இதனால் உடல் பலவீனமடையும்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications