களாக்காய் ஒரு கலக்கல் காய்! அளவுக்கு மிஞ்சினால் ஆண்களின் விந்தணுக்களுக்கு என்னவாகும் தெரியுமா?
சென்னை: களாக்காய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன தெரியுமா? இது விநாயகர் சதுர்த்தி அன்று முழு முதற் கடவுளான விநாயகருக்கு படைக்கப்படும் பழமாகும்.
நாளை கிடைக்க போகும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் களாக்காய் எவ்வளவோ மேல் என்பது ஒரு பழமொழி. அதாவது இது வணிகரீதியாக வளர்த்தால் நல்ல வருமானம் என்பதைத்தான் அந்த பழமொழி விளக்குகிறது.

களாக்காய் புளிப்பு சுவை கொண்டது. இதன் பூ, காய், பழம், வேர் ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை. இது கண்நோய், கண்ணில் ஏற்படும் வெண்படலத்தையும், கரும்படலத்தையும் ரத்த படலத்தையும் நீக்கும் வல்லமை படைத்தது.
களாக்காய் வேரை 50 கிராம் எடுத்துக் கொண்டு அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அந்தத் தண்ணீர் 100 மில்லி ஆக சுண்டக் காய்ச்சிய பின்னர் எடுத்து வடிகட்டி காலை, மாலை இரு வேளையும் 50 மில்லியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பழம் நீரிழிவினால் ஏற்படும் புண்களை ஆற்றும் குணம் கொண்டது. இதனால் கருப்பையில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
இந்த பழத்தின் ஜூஸை சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது. இதன் கொட்டைகளும் பழங்களும் பசியை தூண்டிவிடும். பற்களில், ஈறுகளில் ரத்தம் வழிவதை தடுக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும். இந்த காயில் விட்டமின் ஏ, சி, இரும்பு சத்து இருக்கிறது. பிரசவ காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி, மயக்கத்தை தடுக்கும்.
பித்தத்தை குறைக்கும். ஆஸ்துமா நோயிலிருந்து காக்கும். சரும நோய்களை குணப்படுத்தும். இந்த காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் அடிவயிற்று வலியை சரி செய்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதில் விட்டமின் சி இருப்பதால் காய்ச்சலை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இந்த களாக்காய் இயற்கையாகவே உடலில் உள்ள அழற்சியையும் அலர்ஜியையும் எதிர்த்து போராடும் திறன் கொண்டது. அரிப்புக்கு மருந்தாகிறது. இந்த களாக்காயை அதிக அளவு எடுத்துக் கொண்டால் ஆண்களின் விந்தணுக்கள், விறைப்புத் தன்மையில் பிரச்சினை ஏற்படும். அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது, அசிடிட்டி பிரச்சினை ஏற்படும். எனவே அளவோடு எடுத்துக் கொண்டு நல்ல பலன்களை அடையுங்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications