ஆறாத ரணமும் ஆறுமே.. தோல் அலர்ஜி முதல் நரம்பு தளர்ச்சி வரை விரட்டும் வேப்ப மரம் பட்டைகள்.. சூப்பர்
சென்னை: ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைந்துள்ள வேப்பிலையின் மகத்துவம் ஏராளம். அதிலும் வேப்பம் கொட்டைகளின் பயன்களும் ஏராளம். எப்படி தெரியுமா?
வேப்பிலையின் இலைகள் மட்டுமல்ல, மரத்தின் பட்டைகளும் செரிமானத்துக்கு சிறந்தது.. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது... முக்கியமாக குடல்வாயுவை விலக்கக்கூடியது.. உடலிலுள்ள பித்தத்தை அகற்றவல்லது.

ஜீரணத்தை அதிகரித்து, பசியை தூண்டக்கூடியது.. ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்த மரப்பட்டைகளின் மருத்துவ குணங்கள் வியக்க வைக்கின்றன.. இந்த வேப்ப மர பட்டைகள், சருமத்துக்கு கவசம் போன்றது.. அதனால்தான் சரும நோய்களை அண்டாது தடுக்கிறது..
பட்டைகள்: வெறும் பட்டையை சுத்தம் செய்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி ஆறவைத்து குளித்து வந்தாலே, சருமம் பாதுகாக்கப்படும். அலர்ஜிகள் இருந்தாலும் நீங்கிவிடும்.. அரிப்பு பிரச்சனையும் விலகிவிடும். வேப்பமர பட்டையுடன் கொஞ்சம் கற்பூரத்தையும் அரைத்து, பருக்கள், புண்களின் மீது தடவினால் உடனே தீர்வு கிடைக்கும்.
அதேபோல, அரிப்பு, தேமல் தொந்தரவு வந்தவர்கள், இந்த பசையை தடவினால் நிவாரணம் கிடைக்கும். இந்த மரப்பட்டையுடன் மஞ்ச பொடியும் சேர்த்து சருமத்துக்கு உபயோகிக்கலாம்.
உருமாற்றம்: வேப்பமரப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு, கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படுகிறதாம்.. இந்த மரத்தின் சாற்றினை, விலங்குகளுக்கும் தந்து சமீபத்தில் விஞ்ஞானிகள் பரிசோதித்திருக்கிறார்கள்.. அப்போதுதான், இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் மட்டுமல்லாமல், அதன் புதிய உருமாற்றங்களுக்கு எதிராகவும் செயல்படும் திறன் கொண்டுள்ளதாம் இந்த மரப்பட்டை...
அதைவிட முக்கியமாக மனித செல்களுக்குள் வைரஸ் நுழைவதை தடுக்கும் பேராற்றல் கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
நரம்பு தளர்ச்சி: நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு அருமருந்து இந்த வேப்பம்பட்டைகள்.. 100 வயதான வேப்பமர பட்டையை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொண்டு, அதை சூரணமாக தயாரித்து கொள்ள வேண்டும். இதனை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தாலே நரம்புத்தளர்ச்சி குணமாகிவிடுமாம்.
உடலில் உஷ்ணம் இருந்தால், இந்த வேப்ப மரப்பட்டையே சிறந்த தீர்வாகும்.. காய்ச்சல் இருந்தாலும், மரப்பட்டையே தீர்த்துவிடும்.. சிறிது தண்ணீரில் இந்த பட்டையை போட்டு, பாதி தண்ணீராக சுண்ட வைத்து குடித்தாலே, காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும்.. அல்லது வேப்பமர பட்டையுடன் 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து பொடி செய்து, பசும்பாலில் கலந்து குடித்தாலும் காய்ச்சல் குணமாகிவிடும்.
காயங்கள்: வேப்ப மரப்பட்டையில் கிருமி நாசினிகள் உள்ளதால், தொற்றுநோய்களிலிருந்து நம்மை காக்கிறது.. அதனால்தான் காயங்களையும் விரைந்து ஆற்றுகிறது.. ஆனால், மருந்தாக உட்கொள்வதற்கு முன்பு, டாக்டர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவதே சிறந்த ஆரோக்கியமாகும்.. அதுவே பாதுகாப்பும் ஆகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications