அதிமுக ஆட்சி காலத்தைவிட திமுக ஆட்சியில் அரசு மருத்துவர் நியமனம் மிக குறைவு! விழிக்குமா சுகாதாரத்துறை
சென்னை: அதிமுக ஆட்சிக் காலம் தமிழக சுகாதார துறைக்கு இருண்ட காலம் என அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தார். திமுக அரசு சுகாதாரத் துறையினை தற்போது வழி நடத்தும் விதம் அதைவிட மோசம் என்பது போல் உள்ளது. அவ்வளவு மோசம். அதிமுக ஆட்சி காலத்தில் நிரந்தர பணியில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 12,979 (2013-2018), திமுக அரசில் கடந்த நான்கு வருடங்களில் மொத்தம் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் 1752. 2022ம் வருடத்தில் அறிவிக்கப்பட்ட மொத்த பணியிடங்களில் 1021 பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை. 2024ம் வருடம் மார்ச் மாதத்தில் 2550 மருத்துவர்கள் புதிதாக பணியில் சேர்க்க MRB அமைப்பு அறிவிப்பை வெளியிட்டது. அது குறித்து பின்பு எந்த தகவலும் இல்லை. 2024-ம் வருடமும் முடியப் போகிறது.

தமிழக சுகாதார துறையோ பயிற்சி மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. சொல்லப் போனால் அவர்களை மட்டுமே நம்பி இயங்குகிறது. அவர்களையே அதிகம் சுரண்டுகிறது. உண்மையான விடியல் தமிழக சுகாதார துறைக்கு எப்பொழுது வரும்?

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு நாட்டிலேயே சிறந்து விளங்க அரசு மருத்துவர்களே அதன் முதுகெலும்பு. பொது சுகாதாரத் துறையை மேம்படுத்தாமல் இருப்பது மக்கள் நலனைக் கை கழுவுவதற்கு சமம். - பத்திரிக்கையாளர் நெல்சன் சேவியர்.












Click it and Unblock the Notifications