குழந்தைகளுக்கு அதிகரிக்கும் பார்வை குறைபாடு! பெற்றோர் செய்யும் இந்த தவறே காரணம்! மருத்துவர் வார்னிங்
சென்னை: இந்தக் காலத்தில் பெரும்பாலானோர், குறிப்பாகக் குழந்தைகள், அதிகளவில் கண் கண்ணாடி அணிகிறார்கள். அதிலும் 6 வயதில் இருந்தே கூட கண்ணாடி போடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்தச் சிக்கலுக்கு என்ன காரணம்.. இந்தக் காலத்தில் கண் பாதிப்பு அதிகரிப்பது ஏன்.. இந்தச் சிக்கலைத் தடுப்பது எப்படி! குழந்தைகளின் கண் பார்வையைப் பாதுகாப்பது குறித்து வல்லுநர்கள் அளிக்கும் விளக்கத்தை நாம் பார்க்கலாம்.
முன்பெல்லாம் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகவே கண் கண்ணாடி அணிவார்கள். நம்மை சுற்றி இருப்போரில் தேடினால் ஓரிருவர் மட்டுமே கண்ணாடி போடும் நிலை இருந்தது. ஆனால், இந்தக் காலத்தில் கண் பிரச்சினை காரணமாகக் கண்ணாடி போடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் கண் பாதிப்பு
குறிப்பாகக் கடந்த 10 ஆண்டுகளில் 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை பாதிப்பு (அருகே இருக்கும் பொருட்கள் தெளிவாகத் தெரியும்.. தொலைவில் இருக்கும் பொருட்கள் தெளிவாகத் தெரியாது) அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஆறு வயதிலேயே பல குழந்தைகள் வகுப்பறையில் பிளாக் போர்ட்களில் ஆசிரியர்கள் எழுதுவதைப் பார்க்க முடியவில்லை.. அவை தெளிவாகத் தெரிவதில்லை எனச் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இந்தக் கண் பிரச்சினை சமீப ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் குறித்து புனே மருத்துவர் டாக்டர் ஜெய் கல்கர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு விளக்கமளித்துள்ளார்.
இதுதான் காரணம்!
அதில் அவர், "சில வாழ்க்கை முறை பழக்கங்கள் கிட்டப்பார்வை பாதிப்பை அதிகரிக்கிறது.. குழந்தைகள் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்களைப் பயன்படுத்துவது.. அல்லது சிறிய டிஜிட்டல் திரைகளில் நீண்ட நேரம் படிப்பது ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடலில் இயற்கையான சூரிய ஒளி படாமல் இருப்பதும் இந்த நிலைக்குக் காரணமாக இருக்கிறது. தினசரி குறைந்தது 45 நிமிடங்களாவது வெளியில் விளையாடுவது கிட்டப்பார்வை அதிகரிப்பதைக் குறைக்க உதவும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன" என்றார்.
அதேநேரம் கிட்டப்பார்வை இப்போது தான் மிக அதிகமாக அதிகரித்துவிட்டது என்றும் சொல்ல முடியாது. ஓரளவுக்கு அதிகரிப்பு உண்மை தான் என்றாலும் ஓவராக அதிகரிக்கவில்லை. முன்பு கிட்டப்பார்வை குறித்த விழிப்புணர்வு போதியளவுக்கு இருக்காது. இதனால் சீக்கிரம் டெஸ்ட் செய்ய மாட்டார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால் தொடக்கத்திலேயே டெஸ்ட் செய்துவிடுகிறார்கள். கிட்டப்பார்வை ரொம்ப அதிகரித்துவிட்டதை போன்ற தோற்றத்தைக் கொடுக்க இதுவும் ஒரு பிரதானக் காரணம் என்கிறார்கள்.
முன்கூட்டியே கண்டறிவது நல்லது
ஆனால், இந்தப் பாதிப்பை எவ்வளவுக்கு எவ்வளவு முன்கூட்டியே கண்டுபிடிக்கிறோமோ.. அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.. இளம் வயதிலேயே கிட்டப்பார்வை கண்டறியப்பட்டால், அதைத் திறம்பட நிர்வகிக்க முடியும். ஏற்கனவே குடும்பத்தில் யாராவது கண்ணாடி அணிந்து வருபவர்களாக இருந்தால் அங்குள்ள குழந்தைகள் வழக்கமான பரிசோதனைகளை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்.
தொடக்கக் காலத்திலேயே சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அது பல்வேறு வகையான பார்வைக் குறைபாடுகளை ஏற்படுத்தும். சிக்கல்களை உருவாக்கும். இப்போது கிட்டப்பார்வையை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் கண்ணாடிகள் வந்துவிட்டன. இதன் மூலம் இந்தப் பாதிப்பைத் திறம்பட நிர்வகிக்க முடியும்.
பெற்றோர் செய்ய வேண்டியது
பெற்றோர்களுக்கும் இதில் முக்கிய பங்கு இருக்கிறது. சிறிய வாழ்க்கை முறை மாற்றங்களும் கூட குழந்தைகளின் பார்வையைப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.. குழந்தைகள் ஸ்க்ரீன்களை பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள்.. ஸ்மார்ட்போன்களுக்கு பதிலாக டெஸ்க்டாப் அல்லது டிவிகளில் வீடியோ பார்க்க வைக்கலாம். இதன் மூலம் கண்ணில் ஏற்படும் அழுத்தம் குறையும். சீரான உடற்பயிற்சி மற்றும் வழக்கமான கண் பரிசோதனைகளும் கண் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் என்கிறார்கள் மருத்துவர்கள்!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications