இந்தியாவில் ஒருநாளில் 41,100 பேருக்கு கொரோனா பாதிப்பு; 447 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 41,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 447 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,26,038.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 41,100 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும் ஒருநாளில் 447 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 88,14,579 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 1,29,635 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 42,156.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 82,05,728 ஆகும். இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,79,216.












Click it and Unblock the Notifications