மும்பையில் 16 வயது சிறுமியை கற்பழித்த காதலன், குடும்ப எதிரி
மும்பை பந்த்ரா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது தோழி அதே பகுதியில் உள்ள பெஹ்ராம் நகரில் இருக்கும் அக்தர் குரேஷி(49) என்பவரின் வீட்டுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி அழைத்துச் சென்றுள்ளார். குரேஷி குடும்பத்துக்கும், சிறுமியின் குடும்பத்துக்கும் இடையே பல முறை தகராறு நடந்துள்ளது.
இந்நிலையில் தனக்கு குரேஷி மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து தான் மயங்கியதும் தன்னை கற்பழித்துவிட்டதாக சிறுமி தெரிவித்துள்ளார். மறுநாள் காலையில் எழுந்த சிறுமி குரேஷி வீட்டில் இருந்து தனது காதலன் விஜய் குமார்(எ) முகமது அலியின் வீட்டுக்கு சென்று அங்கு 15 நாட்கள் தங்கியுள்ளார்.
சிறுமி இதுபோன்று பலமுறை வீட்டைவிட்டு வெளியேறி காதலன் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று தனது காதலன் வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டுக்கு வந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் கற்பழிக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
விஜய் குமார் கடந்த 2ம் தேதி வரை சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குரேஷி மற்றும் விஜய் குமாரை நேற்று இரவு கைது செய்தனர்.