‘கொழுக்கட்டை’ சாப்பிடும் போட்டி: 17 கொழுக்கட்டைகளைச் சாப்பிட்ட 72 வயது தாத்தா வெற்றி
காந்தி நகர்: குஜராத்தில் நடைபெற்ற கொழுக்கட்டை சாப்பிடும் போட்டியில் 17 கொழுக்கட்டைகளைச் சாப்பிட்டு 72 வயது முதியவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள பிரம்மா சமூக குழு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொழுக்கட்டை சாப்பிடும் விநோத போட்டி ஒன்றை நடத்தியது. இப்போட்டியில் கோதுமை மாவு, உலர் பழங்கள் மற்றும் நெய்யினால் தயாரிக்கப்பட்ட 80 கிராம் அளவுள்ள கொழுக்கட்டையைச் சாப்பிடுபவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப் படுவார்.
இந்த விநோதப் போட்டியில், 17 பெண்கள் மற்றும் 11 சிறுவர்கள் உட்பட மொத்தம் 79 பேர் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில், 17 கொழுக்கட்டைகளைச் சாப்பிட்டு 72 வயது கனக்பாய் ஓஜா என்பவர் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில், 16 கொழுக்கட்டைகளைச் சாப்பிட்ட பன்வாத் என்பவர் பிடித்தார்.
இதே போன்று, பெண்கள் பிரிவில் 12 கொழுக்கட்டைகளைச் சாப்பிட்ட பத்மினி பென் வஜேரா என்ற பெண்ணும், சிறுவர்கள் பிரிவில் 4 கொழுக்கட்டைகளைச் சாப்பிட்ட சன்னி பார்மர் என்ற சிறுவனும் முதல் இடத்தைப் பிடித்தனர்.












Click it and Unblock the Notifications