டெல்லி பலாத்கார வழக்கு:4 குற்றவாளிகளுக்கான தண்டனை வெள்ளியன்று அறிவிப்பு!!
டெல்லி: டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் குற்றவாளிகள் என்று தெற்கு டெல்லி விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
டெல்லி பலாத்கார வழக்கு:4 குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை அறிவிப்பு! தூக்கு விதிக்கப்படும்?

4 குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாகுர் சிங் ஆகியோர் மீது, பிரிவு 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 376 (2),(ஜி) (கூட்டுப்பாலியல்), 377 (இயற்கைக்கு விரோதமாக குற்றம் இழைத்தல்), 395 (கொள்ளை), 396 (கொள்ளையடிக்கும்போது கொலை செய்தல்), 120பி (உள்நோக்கத்துடன் குற்றம்புரிதல்), 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்திச் செல்லுதல்), தவறான நோக்குடன் கடத்தி ரகசியமாக குற்றம்புரிதல் (365), 394 (வழிப்பறியில் ஈடுபடும்போது காயம் ஏற்படுத்துதல்), 412 (வழிப்பறியில் ஈடுபடும்போது சட்டவிரோதமாக சொத்துகளைக் கொள்ளையடித்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது சார் கோட்டாட்சியரிடம் அளித்த மரண வாக்குமூலம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுமை நேர்ந்தபோது நேரில் பார்த்த அவரது நண்பர் அளித்த சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த 4 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 11 மணி முதல் என்ன தண்டனை விதிப்பது என்பது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
குற்றவாளிகள் 4 பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குற்றவாளிகளின் குற்றச் செயலின் தன்மையைப் பொறுத்து குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்றும் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என்றும் வாதிட்டனர். ஆனால் அரசுத் தரப்பிலோ குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மதிய உணவு இடைவேளையின்றி தொடர்ந்து நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில் வரும் வெள்ளிக்கிழமையன்று தண்டனை விதிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications