டெல்லி பலாத்கார வழக்கு:4 குற்றவாளிகளுக்கான தண்டனை வெள்ளியன்று அறிவிப்பு!!
டெல்லி: டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் குற்றவாளிகள் என்று தெற்கு டெல்லி விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
டெல்லி பலாத்கார வழக்கு:4 குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை அறிவிப்பு! தூக்கு விதிக்கப்படும்?

4 குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாகுர் சிங் ஆகியோர் மீது, பிரிவு 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 376 (2),(ஜி) (கூட்டுப்பாலியல்), 377 (இயற்கைக்கு விரோதமாக குற்றம் இழைத்தல்), 395 (கொள்ளை), 396 (கொள்ளையடிக்கும்போது கொலை செய்தல்), 120பி (உள்நோக்கத்துடன் குற்றம்புரிதல்), 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்திச் செல்லுதல்), தவறான நோக்குடன் கடத்தி ரகசியமாக குற்றம்புரிதல் (365), 394 (வழிப்பறியில் ஈடுபடும்போது காயம் ஏற்படுத்துதல்), 412 (வழிப்பறியில் ஈடுபடும்போது சட்டவிரோதமாக சொத்துகளைக் கொள்ளையடித்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது சார் கோட்டாட்சியரிடம் அளித்த மரண வாக்குமூலம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுமை நேர்ந்தபோது நேரில் பார்த்த அவரது நண்பர் அளித்த சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த 4 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 11 மணி முதல் என்ன தண்டனை விதிப்பது என்பது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
குற்றவாளிகள் 4 பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குற்றவாளிகளின் குற்றச் செயலின் தன்மையைப் பொறுத்து குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்றும் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என்றும் வாதிட்டனர். ஆனால் அரசுத் தரப்பிலோ குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மதிய உணவு இடைவேளையின்றி தொடர்ந்து நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில் வரும் வெள்ளிக்கிழமையன்று தண்டனை விதிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications