சென்னை மாநகராட்சியில் 5000 காலிப்பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1,2,3 மற்றும் 7ல் பணிபுரிய பல்வேறு பிரிவுகளில் 5000 ஆட்கள் தேவை என சென்னை என்விரோ சொலியூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் பேட்டரி ஆட்டோ ஓட்டுநர், தூய்மை பணியாளர், கனரக வாகன ஓட்டுநர், இலகு ரக வாகன ஓட்டுநர், தூய்மை பணியாளர்கள், போன்றவர்கள் அதிகஅளவில் தேவைப்படுகிறார்கள்.

இதேபோல் தொழிற்சாலைகளில் பணிபுரிய பிட்டர், ஹைட்ராலிக் மெக்கானிக், டயர் மேன், வெல்டர் உள்ளிட்ட பணிகளுக்கும் அதிக அளவு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்களில் நேரில் சென்று பங்கேற்கலாம். நேர்முகத்தேர்வு திங்கள் முதல் சனிக்கிழமை வர காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

நேர்முகத் தேர்வு குறித்து மணலி, திருவெற்றியூர், அம்பத்தூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
மண்டல வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் பின்வருமாறு, 7708060149, 7708060150, 7708060151, 7708060153.
நேர்முகத்தேர்வுக்கு வர விரும்புவோர் வரும் போது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு பத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஓட்டுநர் உரிமம்(ஓட்டுநர்கள் மட்டும்) எடுத்து வர வேண்டும்.












Click it and Unblock the Notifications