மாதம் ரூ.50,000 சம்பளம்.. Accenture-ல் அசத்தலான வேலை.. நல்ல வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: இந்தியாவில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஆக்சென்ச்சர்-ல்(Accenture) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ரூ.50 ஆயிரம் மாதசம்பளத்தில் அப்ளிகேஷன் டெக் சப்போர்ட் பிராக்ட்டிசனர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனங்களில் ஒன்று அக்சென்ச்சர் (Accenture). சென்னை, கோவை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் அக்சென்ச்சர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் தற்போது அப்ளிகேஷன் டெக் சப்போர்ட் பிராக்ட்டிசனர்(Application Tech Support Practitioner) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்படலாம்.
மாத சம்பளம்: அப்ளிகேஷன் டெக் சப்போர்ட் பிராக்ட்டிசனர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் மாதம் குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.
கல்வி தகுதி:அப்ளிகேஷன் டெக் சப்போர்ட் பிராக்ட்டிசனர் பணிக்கு இளங்கலை பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும்
ITIL technical certification முடித்திருக்க வேண்டும். இதுதவிர மைக்ரோசாப்ட் வின்டோஸ் டெஸ்க்டாப் மேனேஜ்மென்ட்,எஸ்சிசிஎம், பவர் ஷெல் ஸ்கிரிப்டிங்கில் திறன் பெற்றிருக்க வேண்டும். 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பம செய்யலாம்.
பணி என்ன?: பணிக்கு தேர்வாகும் நபர்கள் மைக்ரோசபாட் வின்டோஸ் டெஸ்க்டாப் மேனேஜ்மெட்டில் டெக்னிக்கல் சப்போர்ட் பணியை செய்ய வேண்டும். டெக்னிக்கல் சப்போர்ட் தொடர்பான ஆவணங்களை பராமரிக்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்பத்துக்கான கடைசி தேதி என்று எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Accenture நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான கூடுதல் விபரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications