எழுத படிக்க தெரிந்தாலே தமிழக மீன்வளத் துறையில் உதவியாளர் வேலை
தமிழக மீன் வளத்துறையின் அசூர் மீன் பண்ணையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருச்சி மாவட்ட ஆடசியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீன் வளத்துறையில் அசூர் மீன் பண்ணையில் இரண்டு மீன் வள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மீன் வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் அருந்ததியினர் பிரிவினர் 35 வயதுக்குள்இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதார்களுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். வலை பின்னுதல், அறுந்த வலைகளை சரி செய்தல் மற்றும் வலை வீச தெரிந்திருக்க வேண்டும். மீனவர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்பணியிடத்தற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://tiruchirappalli.nic.in/ என்னும் இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைந்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மீன்வளத்துறை இயக்குனர் (மண்டலம்), திருச்சி 17/2 சமது பள்ளிவாசல் தெரு, காஜா நகர், திருச்சி- 620020
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 03.04,2020












Click it and Unblock the Notifications