வேலை தேடி செல்பவர்களா.. தர்மபுரி இளைஞர்கள் கவனத்துக்கு! அருமையான வாய்ப்பு
தர்மபுரி: வேலை தேடி கிடைக்காமல் அவதிப்படும் இளைஞரான நீங்கள் தர்மபுரி மாவட்டத்தில் வசிப்பவர்கள் என்றால் உங்களுக்கு சுய தொழில் கற்று முன்னேற் நல்ல வாய்பை இந்திய வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஏற்படுத்தி தருகிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலவச தேன் வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி தொடங்க உள்ளது. பயிற்சி நாட்கள் 10 நாட்கள் ஆகும். பயிற்சி தொடங்கும் நாள் 30.12. 2020.

வயது: 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம்
வகுப்பு நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
பயிற்சி காலங்களில் பயிற்சியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள், காலை, மாலை தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.
அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்
தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை நகல்
- குடும்ப அட்டை நகல்
- புகைப்படம்
- மாற்று சான்றிதழ்
மேலும் விவரங்களுக்கு இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், காதி பில்டிங் கலெக்டர் அலுவலக வளாகம், தருமபுரி-636705. தொலைப்பேசி எண்கள், 04342 230511, 04342 234464.












Click it and Unblock the Notifications