பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை.. 10ம் வகுப்பு முடிச்சவங்க அப்ளை பண்ணலாம்.. 2 நாள் தான் இருக்கு
சென்னை: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஆபிஸ் அசிஸ்டண்ட் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இதற்கு விண்ணபிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து விடுங்கள். தமிழ் மொழி தெரிந்து இருப்பது அவசியம் ஆகும்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆஃப் பரோடா. மத்திய நிதி அமைச்சகங்களின் கீழ் வரும் இந்த வங்கியில் கை நிறைய சம்பளம், மாதம் 6 நாட்கள் விடுமுறைகள், பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இதனால் இந்த வங்கிகளில் எப்படியாவது படித்து வேலையில் சென்றுவிட வேண்டும் என இளைஞர்கள், இளம்பெண்கள் போட்டிப் பொட்டுக்கொண்டு படித்து தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

பேங்க் ஆஃப் பரோடா
இந்த நிலையில் தான், போட்டித் தேர்வர்களுக்கு ஆஃபர் வழங்கும் விதமாக, தற்போது வரிசையாக வங்கிகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த மாத தொடக்கத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அலுவலக உதவியாளர் 500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்க முடியும்? கல்வித்தகுதி என்ன என்பனவற்றை இங்கு பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 24 காலிப்பணியிடங்களும், கேரளாவில் 19 பணியிடங்களும், ஆந்திர பிரதேசத்தில் 22 பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். விண்ணப்பிக்க மாநிலங்கள் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக தமிழகம் என்றால் தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை பேசவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி விண்ணப்பதாரர்களை பொறுத்தவரை 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும். பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை:
ஆன்லைன் டெஸ்ட், உள்ளூர் மொழித்திறன் தேர்வு ஆகியவை அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 23.05.2025 கடைசி நாளாகும். அதாவது நாளை மறுநாள் தான் கடைசி நாள் ஆகும்.
தேர்வு மையங்கள்
தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-04/Advertisment-02-36.pdf.












Click it and Unblock the Notifications