மாத சம்பளம் ரூ.92,000.. சிஐஎஸ்எப்பில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. பிளஸ் 2 முடித்தாலே போதுமாம்!
டெல்லி: சிஐஎஸ்எப் படையில் ரூ.92 ஆயிரம் மாத சம்பளத்தில் பணிபுரிய விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் சிஐஎஸ்எப் எனும் மத்திய தொழில்பாதுகாப்பு படை உள்ளது. இங்கு பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான முறையான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சேர்ந்து சேவையாற்றலாம்.

காலியிடங்கள் எவ்வளவு?
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் மொத்தம் 2 பிரிவுகளில் 540 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்) பணிக்கு 122 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தலைமை காவலாளர் (மினிஸ்டெரியல்) பணிக்கு 418 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் விண்ணப்பம் செய்ய முடியும்.

கல்வி தகுதி என்ன?
இதில் உதவி ஆய்வாளர் (ஸ்டெனோகிராபர்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் கொண்டிருக்க வேண்டும். தலைமை காவலர் (மினிஸ்டெரியல்) பணிக்கு கணினியில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்

வயது-மாத சம்பளம் எவ்வளவு?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 25.10.2022 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். தலைமை காவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை கிடைக்கம். உதவி சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.29200 முதல் ரூ.92,300 வரை கிடைக்கும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் திறனறி தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் https://www.cisf.gov.in/cisfeng/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய 25.10.2022 கடைசிநாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு கட்டணம் கிடையாது.
வேலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications