தமிழக அரசு துறையில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு.. ஏப்.6ல் எழுத்து தேர்வு
சென்னை: டிப்ளமோ சிவில் இன்ஜினிரியங் பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு தமிழக அரசு துறையில் காத்துக்கொண்டிருக்கிறது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறையில் 531 இளநிலை பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன- ஏப்ரல் 4ம் தேதி வரை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
காலிபணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில். "தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 813, பொதுப்பணித்துறையில் 348 இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்கள், கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல் துறையில் இளநிலை தொழில்நுட்பட உதவியாளர் ஒரு பணியிடம், மீன்வளத்துறையில் இளநிலை பொறியாளர் 5 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 5ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 4ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: இளநிலை வரை தொழில் அலுவலர், இளநிலை பொறியாளர் பணிக்கு டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும் அல்லது மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் படித்து இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ₹150. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
எழுத்து தேர்வு: இளநிலை பொறியாளர்தேர்வில் விண்ணப்பிப்பவர்களுக்கு வரும் ஜூன் 6ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும். இந்த தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சாவூர் ஆகிய 7 மையங்களில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications