மதுரையில் IT வேலை.. எச்சிஎல் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த காலியிடங்கள் குறித்த முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மதுரையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி மதுரை எச்சிஎல் ஐடிநிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் (Data Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 6 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு பிரைமரி ஸ்கில்ஸாக Domain Competencies (ERS)-Medical Devices-Hospital-PMS இருக்க வேண்டும். செகண்டரி ஸ்கில்ஸாக Domain Competencies (ERS)-PMS-Complaint Handling இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் சம்பளம் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு என்பது கடந்த மாதம் 23ம் தேதி வெளியானது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications