அனுபவம் வேண்டாம்.. டிகிரி முடித்திருந்தாலே போதும்.. HCL நிறுவனத்தில் இன்றும், நாளையும் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு பிரத்யேகமான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. பணிக்கான இண்டர்வியூ சோழிங்கநல்லூரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதில் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ளது. எச்சிஎல் சார்பில் தற்போது புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

எச்சிஎல் சார்பில் தற்போது கஸ்டமர் சப்போர்ட் அசோசியேட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ என்பது இன்று (மே 19), நாளை (மே 20) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். 2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அவர்கள் கடைசி செமஸ்டர் மார்க் ஷீட்டை கையில் வைத்திருக்க வேண்டும். இந்த பணி இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு பொருந்தாது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு US shifts முறையில் வேலை இருக்கும். இண்டர்வியூ என்பது இன்று மற்றும் நாளை என 2 நாட்களும் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Sholinganallur ElCOT Campus, Tower 4, Chennai - 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Great in Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைசிகட்ட இண்டர்வியூவின்போது மாதசம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படும். தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பணியில் சேர்வோருக்கு அலுவலகத்தில் இருந்து 30 கிமீ தொலைவிற்கு Cab வசதி வழங்கப்படும். பெண் பணியாளர்களுக்கு இது இலவசமாகும்.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications