வங்கியில் வேலை பார்க்க ஆசையா.. 10,277 கிளார்க் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
சென்னை: ஐபிபிஎஸ் கிளர்க் வங்கி பணி (IBPS Clerk Bank job): நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10,277 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் என பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்ப ஐபிபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 60 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த ஒன்றாம் தேதி ஐபிபிஎஸ் 10,277 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீசஸ் வங்கி, கனரா வங்கி என நாடு முழுக்க உள்ள பொதுத்துறை வங்கிகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, வாடிக்கையாளர் சேவை அசோசியேட்ஸ் (கிளர்க்) - 10,277 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 897 பணியிடங்கள் உள்ளன. ஆந்திராவில் 367, கர்நாடகா - 1,170, கேரளா - 330, புதுவை - 19, தெலுங்கான 261 என மொத்தம் 10,277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி, வயது வரம்பு:
பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது நிரம்பியவர்கள் முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். 21.08.2025 அன்று தேதிப்படி கணக்கெடுக்கப்படும். அதாவது, 02.08.1997-க்கு முன்போ, 01.08.2005-க்கு பிறகோ பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது.
அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
முதன்மை தேர்வு (கொள்குறி வகை), மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில் / கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். மெயின்ஸ் தேர்வானது சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக்கட்டணத்தை பொறுத்தவரை பொதுப்பிரிவு, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.850 ஆகும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.175 ஆகும். ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள். தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர் மாதம். தேர்வு முடிவு வெளியாகும் நாள் நவம்பர் ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications