ரூ.1.12 லட்சம் சம்பளம்! டிகிரி, டிப்ளமோ, என்ஜினியரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு! என்ஐசிஇடியில் வேலை
டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் காலரா மற்றும் குடல்நோய் சார்ந்த நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்கள் ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரையிலான சம்பளத்தில் நிரப்பப்பட உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் காலரா மற்றும் குடல் நோய் (National Institute of Cholera and Enteric Diseases அல்லது NICED) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: கொல்கத்தாவில் உள்ள காலரா மற்றும் குடல் நோய் நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 28 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இளங்கலை பிரிவில் டிகிரி முடித்தவர்கள், டிப்ளமோ, என்ஜினியரிங் படித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். இளங்கலை பட்டப்படிப்பை பொறுத்தமட்டில் விலங்கியல், மாலிகுலர் பயோலாஜி பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயோலாஜி, வைரலாஜி, இம்மினோலாஜி, பயோ டெக்னாலஜி, சைக்காலஜி, தாவரவியல், சோசியல் வொர்க், சோசியாலஜி, நர்சிங், வெட்னரி சயின்ஸ் படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
டிப்ளமோ படிப்பு என்றால் மெடிக்கல் லேபாரேட்டரி டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். மேலும் என்ஜினியரிங் பிரிவில் இன்ஸ்ட்ரூமென்டெஷன், சிவில், எலக்ட்ரிக்கல், ஐடி படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,400 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.icmr.gov.in மற்றும் www.niced.org.in இணையதளங்களுக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி கடைசி நாளாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications