10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தாலே போதும்.. மாதசம்பளம் ரூ.63,200.. சூப்பர் வேலை..அழைக்கும் ஐஜிஎன்ஓயூ
டெல்லி: இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (Indira Gandhi National Open University) இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் பிரிவில் மொத்தம் 200 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வோர் 10 அல்லது 12ம்வகுப்பு முடித்திருப்பதோடு ஒரு நிமிடத்துக்கு ஆங்கிலத்தில் 40 வார்த்தைகளும், இநு்தி என்றால் 35 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 வழங்கப்படும். அதிகபட்சமாக மாதம் ரூ.63,200 வரை வழங்கப்படும்.
மேலும் விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 31.03.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் ஓபிசி பிரிவினருக்கு 3 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயதுக்குள்ளும், பிடபிள்யூபிடி பிரிவினருக்கு 10 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினரின் விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிடபிள்யூபிடி பிரிவினருக்கு விண்ணப்பம் கட்டணம் கிடையாது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்குள் ignou.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் கம்யூட்டர் பேஸ்ட்டு தேர்வு, திறனறி தேர்வு/டைப்பிங் டெஸ்ட், நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications