எல்லை பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டர் பணி.. மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை: எல்லை பாதுகாப்பு படையில் (பி எஸ் எப்) இன்ஸ்பெக்டர் பணிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன தகுதிகள் என்பனவற்றை கீழே காணலாம்.
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் பதவிக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்று இங்கே பார்க்கலாம்.

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் கிராஜுவேஷன் (UG)அல்லது போஸ்ட் கிராஜுவேஷன்(PG) அல்லது டிப்ளமோ(DIPLOMO) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பி எஸ் எஃப் (BSF) இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்: எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பணிக்கு மொத்தம் இரண்டு பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முறை: விண்ணப்பங்கள் ஏற்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதலில் எழுத்து தேர்வு நடத்தப்படும். அதன்பின்னர் உடல் தகுதி தேர்வு Physical Standard Test Medical Examination நடத்தப்படும். அதன்பின்னர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பள விவரம்: தேர்வாகும் பணியாளர்களுக்கு Pay Matrix Level 7 அளவின் படி மாதம் ரூபாய் 44,900/- முதல் ரூபாய் 1,42,400/- வரை சம்பளம் ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதில் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கடைசி நாள் 11.07.2023 ஆகும். அதன்பின்னர் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/Group-B%20(Non%20Gazetted-Non%20Ministerial)%20(Combatised)%20post%20in%20the%20Border%20Security%20Force.pdf?rel=2023061201 கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications