உளவுத்துறையில் வேலை.. ரூ.69 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு போதும்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் உளவுத்துறையில் காலியாக உள்ள 677 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
உளவுத்துறையில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் / மோட்டோர் டிரான்ஸ்போர்ட் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 677 பணியிடங்கள் நிரப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வி தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிப்பது எப்படி என்ற விவரங்களை அறியலாம்.

பணியின் விவரம்: மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 315 பணியிடங்களும், செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் பணிக்கு 362 பணியிடங்களும் என மொத்தம் 677 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. எழுத்துத்தேர்வு,நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்னப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: இந்த இரு பணியிடங்களுக்குமே 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். செக்யூரிட்டி / அஸ்சிஸ்டண்ட் டிரான்ஸ்போர்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எல்.எம்.வி டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். மோட்டோர் மெக்கானிசம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களும் டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். அடிப்படை கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்சி ஆகும். விண்ணப்பிக்கும் மாநிலத்தில் குடியிருப்பதற்கான சான்று அவசியம்.
வயது வரம்பு; செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் பணிக்கு 18 வயது நிரம்பியவர்களும் 25 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?: செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 21,700 - 69,100 வரை சம்பளமாக வழங்கப்படும். மல்டி டாஸ்கிங் பணிக்கு ரூ. 18,000 - 56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.mha.gov.in/en/notifications/vacancies என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் 14.10.2023 முதல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்குகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 13.11.2023 ஆகும். விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவை சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர், ஒபிசி பிரிவினர் ஆகியோர் 500 செலுத்த வேண்டும். இதர பிரிவினர் ரூ. 50 கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு பற்றிய அறிவிப்பு உள்துறை அமைச்சக இணையதளத்தில் வரும் 14 ஆம் தேதிக்குள் வெளியாகும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications