IT JOBS: சென்னையிலேயே வேலை ரெடியா இருக்கு.. நவம்பர் 29ல் இண்டர்வியூ.. அழைக்கும் TCS
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வரும் நவம்பர் 29ம் தேதி சென்னை டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் Angular Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனம் தான் டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். இந்த ஐடி நிறுவனத்தில் நவம்பர் 29ம் தேதி பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் Angular Developer பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.
அதன்படி ஜாவா ஸ்கிரிப்ட் புரோகிராமிங் லேங்குவேஜில் நிபுணராக இருக்க வேண்டும். எச்டிஎம்எல் மற்றும் சிஎஸ்எஸ் உள்ளிட்டவற்றை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். UX கான்செப்ட்ஸ் பற்றிய புரிதல் வைத்திருக்க வேண்டும். அதேபோல் ஆங்குலர் வெர்ஷன்ஸ், லைப்ரேரிஸ் மற்றும் ஃபிரேம்வொர்க்ஸ் உள்ளிட்டவற்றை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் ஃப்ரண்ட் எண்ட் டெவலப்மென்ட், கிராஸ் ஃபங்ஷனல் கோலாபோரேஷன் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஆங்குலர் (Angular), டைப்ஸ்கிரிப்ட் (TypeScript), எச்டிஎம்எல், சிஎஸ்எஸ் உள்ளிட்டவற்றில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் 5க்கும் அதிகமான ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு ரேத்வாகும் நபர்கள் வெப்அப்ளிகேஷன்ஸ் மற்றுமு் வெப்சைட்ஸ் டிசைன் மற்றும் டெவலப் செய்ய வேண்டி இருக்கும். உருவாக்கப்படும் வெப்சைட் யூசர் ஃப்ரண்ட்லியாக இருக்க வேண்டும். இதுதவிர இன்னும் சில முக்கிய பணிகளை செய்ய வேண்டி இருக்கும். அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 29ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு அவர்களுக்கு இண்டர்வியூவுக்கான இடம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பி வைக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications