IT JOBS: சென்னை - பெங்களூர் உள்பட 5 இடங்களில் ஐடி வேலை.. TCS தரும் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், கேரளா, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தொடர்ந்து பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது Java Springboot+GCP பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு சற்று விரிவாக பார்க்கலாம். அதன் விவரம் வருமாறு:
என்னென்ன தகுதிகள்?
விண்ணப்பம் செய்வோருக்கு குறைந்தபட்சம் 5+ ஆண்டுகள் ஜாவா (ஸ்பிரிங்புட்) பேக்எண்ட் டெவலப்மென்ட்டில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்குலர்/ரியாக்ட் ஜே.எஸ் மற்றும் மாடர்ன் ஜாவா ஸ்கிரிப்ட்/டைப்ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
'டாக்கர்' தெரிந்திருக்க வேண்டும்
அதேபோல் Kafka (event Producers/consumers, topics, partitions, schmea rgistry) உள்ளிட்டவற்றில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். மேலும் கூகுள் கிளவுட் பிளாட்பார்ம் , அதன் சர்வீஸ்களான Pub/Sub, GKE உள்பட பிறவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். Docker, Kubernetes, CI/CD Pipelines தெரிந்திருக்க வேண்டும்.
தனியாக பணியாற்ற தெரிய வேண்டும்
RESTful API டிசைன், மைக்ரோசர்வீசஸ் ஆர்க்கிடெக்ட்ச்சர் பற்றிய அறிவு இருக்க வேண்டும். எஸ்க்யூஎல், NoSQL டேட்டாபேசஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மேலும் மானிட்டரிங் மற்றும் லாக்கிங் டூல்ஸ்கள் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக Stackdriver, Prometheus, Dynatrace தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, தனியாக பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மேலும் ஜாவா ஸ்பிரிங்புட்டில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
5 இடங்களில் நியமனம்
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், கேரளா, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் நிறுவனங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, இடம், நேரம் உள்ளிட்டவை தெரிவிக்கப்படும். அதன்பிறகு இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: டிகிரி முடிக்காதவர்களுக்கும் வேலை.. அழைக்கும் HCL..ஏப்ரல் 14ல் சென்னையில் இண்டர்வியூ -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
நிலக்கரி நிறுவனத்தில் 1,055 காலியிடங்கள்.. 47 ஆயிரம் சம்பளம்! மத்திய அரசு கம்பெனிங்க.. விட்றாதீங்க -
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 60 ஆயிரம் வரை சம்பளம்.. டிப்ளமோ, டிகிரி முடிச்சவங்க விட்றாதீங்க! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications