Zoho IT Jobs: சென்னை - தென்காசியில் வேலைவாய்ப்பு.. வந்தாச்சு புதிய அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோ உள்ளது. இந்நிலையில், தான் சென்னை மற்றும் தென்காசியில் செயல்பட்டு வரும் ஜோஹோ நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் ஜோஹோ செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது சைபர் செக்யூரிட்டி இன்ஜினியர் (Cyber Security Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வெப், பேக்எண்ட், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி உள்ளிட்ட ரோலில் செயல்பட வேண்டியிருக்கும். இதனால் விண்ணப்பம் செய்வோர் பேக்எண்ட், வெப், ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஸ்ட்ராங் கோடிங் அறிவு இருக்க வேண்டும். ரீட், அனலிசிஸ், ரிஃபேக்டர், புரோடக்ஷன் கோட் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். ரியல் வேர்ல்ட்செக்யூரிட்டி வல்நரபிலிட்டிஸ் பிக்ஸ் செய்யும் பணியில் அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் செக்யூரிட்டிஃபண்டமென்டல்ஸ்களான OWASP Top 10, Authentication, Session Handling, Secure APIs உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 6 ஆண்டு வரை டெவலப்மென்ட் பிரிவில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications