வங்கியில் வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதி போதும்.. தேதி முடிய போகுது.. மறக்காம அப்ளை பண்ணுங்க
சென்னை: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவி வேலைகளுக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா. மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவி வேலைகளுக்கான (Safai Karmachari Cum Sub-Staff And/ Sub-Staff ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மொத்தம் 484 பேர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி போதும். இந்த பணியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பவை உள்ளிட்ட விவரங்களை தெளிவாக பார்க்கலாம்.

வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 26 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி போதும். இந்த பணியிடங்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருப்பது போதுமானது.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.14, 500 முதல் 28,145 - வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா, உத்தர பிரதேசம், மகராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சென்ட்ரல் வங்கியின் கிளையில் பணியில் சேர்க்கப்படுவார்கள். பணியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்து இருத்தல் அவசியமானது.
தேர்வு முறை: கணிணி வழி எழுத்து தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உள்ளூர் மொழித் தேர்வும் நடைபெறும். இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணி வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் நகரங்கள் அடிப்படையில் அவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும். தேர்வு மையங்கள் குறித்த விவரம் ஹால்டிக்கெட்டில் தெளிவாக இடம் பெறும்.
விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட சில பிரிவினருக்கு மட்டும் விண்ணப்ப கட்டணமாக 175 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒபிசி உள்பட பிற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும். அதாவது வரும் 09.01.2024 கடைசி நாளாகும். விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை நன்கு படித்துக்கொள்வது அவசியம். தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள https://centralbankofindia.co.in/en என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications