சென்னையில் வேலை.. மாதம் ரூ.18 ஆயிரம் வரை சம்பளம்.. 8ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
சென்னை: பெண்களுக்கான உதவி மையமாக செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் பெண்கள் உதவி மையம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பணியாற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் விவரங்களை பார்க்கலாம்.
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (0SC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT Administrator) (காலிப்பணியிடம் 1) இளங்கலை பட்டப்படிப்பு (B.Tach, B.Se) மற்றும் Diploma in computers/IT மற்றும் தர மேலாண்மையியல் (Data Maragement), செயல்முறை ஆவணங்கள் தயாரிப்பு (Process Dotumentation) மற்றும் வலை அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்கள் (Wab based reporting formats)-ல் மாநில/மாவட்ட/தன்னார்வ தொண்டு நிறுவனம் இவைகளில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் தேவை ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 18,000/- ஆகும்.
வழக்கு பணியாளர்கள் (Case workor) (காலிப்பணியிடங்கள் 2) சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும் மேலாண்மை வளர்ச்சியில் உளவியல் ஆலோசகரி (Counseling Psychology) (அல்லது) (Davelopment Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் பேகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும். உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையனராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது 35 க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்ககாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,000/ ஆகும்.
பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்: பண்முக உதவியாளர் (Mull Purpose Helper) (காலிப்பணியிடம்1) ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.5,400/-ஆகும்.
விரும்பும் பதவிகளுக்கு https//cheonai.nic.in. என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 0509.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநக அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம். சிங்காரவேலர் மாளிகை. இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது chndswosouthimat.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்திட வேண்டும்.












Click it and Unblock the Notifications