பேங்க் ஆப் பரோடாவில் வேலை.. 592 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. மறந்துடாதீங்க
பேங்க் ஆப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ண்ப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கை நிறைய சம்பளம் கிடைக்கும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடவர்கள் யார் என்ற விவரங்களை பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க ஆப் பரோடாவில் எஸ்.ஓ எனப்படும் சிறப்பு அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 592 காலிப்பணியிடங்கள் மொத்தம் அறிவிக்கப்படன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.. இந்த காலிப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
மேனேஜர்( நிதி), ஆர்கிடெக், ஏ.ஐ, ரிலேஷன்ஷிப் மேனேஜர், ப்ராஜெக்ட் மேனேஜர், டிஜிட்டல் பார்ட்னர்ஷிப் லீட், டேடே என்ஜினியர், பிசினஸ் மேனேஜர் உள்பட மொத்தம் 83 வகையான பணியிடங்களில் 592 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முதல் பி இ, பிடெக், எம்பிஏ, சிஏ, முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நாடு முழுவதும் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் பணியமர்த்தப்பட வாய்ப்புள்ளது. கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு & சம்பளம்: வயது வரம்பை பொறுத்தவரை அனைத்து பணியிடங்களுக்கும் ஒரே மாதிரியான வரம்பு இல்லை. பணியிடங்களுக்கு தகுந்தபடி வயது வரம்பு மாறுபடுகிறது. குறைந்தபட்சம் 22 வயதும், அதிகபட்சம் 50 வயதுக்கு மிகாமல் உள்ளவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. பணிக்கு தேர்வு ஆகும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் 40 ஆயிரம் முதல் வழங்கப்படும்.
தேர்வு முறை: தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி,எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாகவே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதார்கள் https://www.bankofbaroda.in/ அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க 19.11.2024 கடைசி தேதியாகும். அதாவது இன்றே கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வமும் கல்வி தகுதியும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-10/Advertisement-Contractual-30102024-Final-19-18.pdf கிளிக் செய்யவும்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications