"பேங்க் ஆஃப் பரோடா" வங்கியில் அதிகாரி வேலை.. 592 பணியிடங்கள்! கை நிறைய சம்பளம்.. விட்றாதீங்க
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் எஸ்ஓ எனப்படும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 592 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க என்ன கல்வித்தகுதி, வயது வரம்பு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆப் பரோடா. குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் வங்கி கிளைகள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த வங்கியில் பணியாற்றுக்கிறார்கள். மத்திய அரசின் பொதுத்துறை வங்கி என்பதால், கை நிறைய சம்பளம் + சலுகைகள் கிடைக்கும்.

இதனால், வேலை தேடும் இளைஞர்கள் இத்தகைய பொதுத்துறை வங்கிகளில் வேலை செய்ய பெரிதும் ஆர்வம் காட்டுகிறர்கள். பேங்க ஆப் பரோடாவில் காலியாக எஸ்.ஓ எனப்படும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. வயது வரம்பு என்ன? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம் & கல்வி தகுதி: மேனேஜர்( நிதி), ஆர்கிடெக், ஏ.ஐ, ரிலேஷன்ஷிப் மேனேஜர் என 83 வகையான பணியிடங்களில் உள்ள 592 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முதல் பி இ, பிடெக், எம்பிஏ, சிஏ, முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு & சம்பளம்: பணிக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். குறைந்தபட்சம் 22 வயதும், அதிகபட்சம் 50 வயதுக்கு மிகாமல் உள்ளவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் 40 ஆயிரம் முதல் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி,எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.100 கட்டணம் ஆகும்.
தேர்வு முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதார்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வரும் 19.11.2024 கடைசி தேதியாகும். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-10/Advertisement-Contractual-30102024-Final-19-18.pdf கிளிக் செய்யவும்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications