Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கிகளில் அதிகாரி வேலை.. 896 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் (எஸ்.ஓ) உள்பட 896 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பித்து விடவும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? கல்வி தகுதி, வயது வரம்பு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிட்டு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

ibps job Employment

அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் (SO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
ஐடி அதிகாரி கிரேட் I - 346 பணியிடங்கள்
வேளாண் கள அலுவலர் - 25
ராஜ்பாஷா அதிகாரி - 170
சட்ட அதிகாரி - 125
எச்.ஆர்/ பணியாளர் அதிகாரி - 205
மார்க்கெட்டிங் அதிகாரி - 25 என மொத்தம் 896 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். ஐடி(தகவல் தொழில்நுட்பம்) அதிகாரி பணிக்கு என்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகள் முடித்து இருக்க வேண்டும். வேளாண்மை கள அதிகாரி பணிக்கு வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, பயோடெக்னாலஜி உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த படிப்புகளை முடித்து இருப்பது அவசியம். எல்.எல்.பி பணிக்கு சட்டம் படித்து முடித்து இருக்க வேண்டும்.. கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: அனைத்து பணியிடங்களுக்கும் 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.

தேர்வு எப்போது?: தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே 21.08.2024- கடைசி நாளாகும். விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் இன்றே விண்ணப்பித்து விடவும். முதன்மை தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும். மெயின் தேர்வு டிசம்பர் மாதத்திலும் நேர்முகத்தேர்வு பிப்ரவரி/மார்ச்சில் நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க முன்பாக தேர்வு அறிவிப்பினை விண்ணப்பதாரர்கள் படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் https://www.ibps.in/index.php/specialist-officers-xiv/ செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+