மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. பெங்களூரில் பணியிடம்.. மாதம் 60 ஆயிரம் சம்பளம்.. அப்ளை பண்ணுங்க
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான BEML-ல் காலியாக உள்ள குரூப்-சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 100 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) என்பது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் என்பதால் பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான ஊதியம் + சலுகைகள் இங்கு பணிசெய்யும் ஊழியர்களுக்கு கிடைக்கும். இந்த நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 100 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு போன்ற முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
ஐடிஐ டிரெய்னி - ஃபிட்டர் - 07 பணியிடங்கள்
ஐடிஐ டிரெய்னி - டர்னர் - 11
ஐடிஐ டிரெய்னி - மெஷினிஸ்ட் - 10
ஐடிஐ டிரெய்னி - எலக்ட்ரீசியன் - 08
ஐடிஐ டிரெய்னி - வெல்டர் - 18
அலுவலக உதவியாளர் டிரெய்னி - 46
என மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வி தகுதி: ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். 60 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து இருப்பது அவசியம். மூன்று ஆண்டுகள் அனுபவமும் அவசியம். அலுவலக உதவியாளர் டிரெய்னி பணிக்கு டிகிரி/டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு & சம்பளம்: அனைத்து பணியிடங்களுக்கும் வயது உச்ச வரம்பு 32 ஆகும். எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.16,900 - 60,650 வரை கிடைக்கும்.
தேர்வு முறை: கணிணி வழியிலான எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமும் தேவையான கல்வி தகுதியும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. https://www.bemlindia.in/careers/current-recruitments/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும். முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எழுத்து தேர்வை பொறுத்தவரை பெங்களூரில் மட்டுமே நடைபெறும். தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் https://www.bemlindia.in/wp content/plugins/career/WCP/DATA/Writereaddata/Career/KP_S_14_2024.pdf செய்யவும்.












Click it and Unblock the Notifications