வங்கியில் வேலை வேண்டுமா? 8,612 பணியிடங்கள்.. மிஸ் பண்னிடாதீங்க.. இன்றே கடைசி நாள்!
சென்னை: Probationary Officer, Clerk, Officer Scale ஆகிய 3 பிரிவுகளில் மொத்தம் 8612 பணியிடங்கள் நிரப்ப ஐபிபிஎஸ் (IBPS) சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது விண்ணப்பிக்க கூடுதல் அவகாசத்தை ஐபிபிஎஸ் அளித்தது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.
இந்தியாவில் எஸ்.பி.ஐ வங்கியை தவிர்த்து பிற பொதுத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியை வங்கி பணியாளர் தேர்வு அமைப்பான IBPS மேற்கொண்டு வருகிறது. வங்கிகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வங்கியில் காலியாக இருக்கும் சுமார் 8 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் எத்தனை: Probationary Officer, Clerk, Officer Scale ஆகிய 3 பிரிவுகளில் மொத்தம் 8612 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஆபிஸ் அசிஸ்டென்ஸ் (மல்டிபர்பஸ்) பணிக்கு 5538 பேர், ஆபிசர் ஸ்கேல் - I பணிக்கு 2485 பேர், ஆபிசர் ஸ்கேல் - II (அக்ரிகல்சர் ஆபிசர்) பணிக்கு 60 பேர், ஆபிசர் ஸ்கேல் - II(மார்க்கெட்டிங் ஆபிசர்) பணிக்கு 3 பேர், ஆபிசர் ஸ்கேல் - II(டிரஸ்டரி மேனேஜர்) பணிக்கு 8 பேர், ஆபிசர் ஸ்கேல் - II(சட்டம்) பணிக்கு 24 பேர், ஆபிசர் ஸ்கேல் - II (சிஏ) பணிக்கு 18 பேர், ஆபிசர் ஸ்கேல் - II (ஐடி) பணிக்கு 68 பேர், ஆபிசர் ஸ்கேல் - II (ஜெனரல் பேங்கிங் ஆபிசர்) பணிக்கு 332 பேர், ஆபிசர் ஸ்கேல் - III பணிக்கு 73 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிகிரி, சார்ட்டர்ட் அக்கவுண்ட், எம்பிஏ உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருப்பதோடு அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் விவரம்:
*ஆபிசர் ஸ்கேல் - I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 29,000 முதல் ரூ. 33,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
* ஆபிசர் ஸ்கேல் II பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 33,000 முதல் ரூ.39,000 வரை வழங்கப்படும்
*ஆபிசர் ஸ்கேல் III பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.38,000 முதல் ரூ. 44,000 வரை வழங்கப்படும்
*ஆபிஸ் அசிஸ்டென்ட் (மல்டிபர்பஸ்) பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் ஊதியமாகா கிடைக்கும்
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கான கட்டணம் ரூ.850 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் ரூ.175 ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.ibps.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 ஆம் தேதி கடைசி நாளாகும். முதலில் 21 ஆம் தேதி வரை கடைசி நாள் கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றே கடைசி நாளாகும்.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications