எஸ்.பி.ஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்திருந்தாலே போதும்.. தேதி முடியப்போகுது மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான விண்னப்பிக்கும் அவகாசம் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அறிவிப்புகளை வெளியிட்டு பணியிடங்களை நிரப்பி வருகிறது. போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் தேர்வர்கள் எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில், தான் 8,283 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

Jobs in SBI candidates can Apply for 8283 Junior Associate Clerk posts, Check deets here

காலிப்பணியிடங்கள்: ஜூனியர் அசோசியேட் ( வாடிக்கையாளர் உதவி &சேல்ஸ்) கிளர்க் கேடர் பதவிகள் - 8,283 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும்,

வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது நிரம்பியவர்களும் 28 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது ஒபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு. இது குறித்த விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 17,900 - 47,920 வரை சம்பளமாக கிடைக்கும்.

தேர்வு முறை: முதன்மை தேர்வு , மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.

தேர்வு மையங்கள்: தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை முதன்மை தேர்வுகள் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும்.

தேர்வு எப்போது?: முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும், மெயின் தேர்வு பிப்ரவரி மாதமும் நடைபெறும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.12.2023 ஆகும். இன்னும் 5 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால், தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தாமதம் இன்றி உடனே விண்ணப்பித்து விடுங்கள். ஏனெனில் கடைசி நேரங்களில் அதிகம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதால் விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

தேர்வு அறிவிப்பினை படிக்க https://sbi.co.in/documents/77530/36548767/161123-JA+2023-Detailed+Advt.pdf/926d28be-7df8-36f3-7113-344404668498?t=1700129762521 இங்கே கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+