ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு அலுவலகத்தில் பணி.. மாசம் ரூ 26 ஆயிரம் சம்பளம்!
சென்னை: தமிழக அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் திட்ட அலுவலர் பணிக்கான காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது திட்ட அலுவலர் (Programme Officer) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 8-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவர். தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.
இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள். மாத ஊதியமாக ரூ 26,250 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.tn.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் டிகிரி அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 40 ஆகும். குழந்தை நலம்/ சமூக நலம்/ கல்வி/ தொழிலாளர் நலன் இவற்றில் ஏதேனும் ஒன்றில் 3 வருடம் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும். சமூகப்பணி/ குற்றவியல்/ கல்வியியல்/ குழந்தை வளர்ச்சி/ உளவியல்/ சமூகவியல் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்பு துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை- 10.












Click it and Unblock the Notifications