கிரியேட்டிவாக எழுதும் திறமை உள்ளவரா? 'ஒன்இந்தியா தமிழ்' வழங்கும் அருமையான வாய்ப்பு!
சென்னை: எழுத்தாற்றல் உள்ளவரா, கிரியேட்டிவாக எழுதுவீர்களா, எழுத்தில் சாதிக்கும் தாகம் கொண்டவரா.. அப்படியானால், நமது ஒன்இந்தியாதமிழ் செய்தி தளத்தில், ஃப்ரீலேன்ஸ் அடிப்படையிலான வாய்ப்பு வந்துள்ளது.
அரசியல், கிரைம், சமகால நடப்பு நிகழ்வுகள், விளையாட்டு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நீங்கள் செய்தி/கட்டுரை எழுதி அனுப்பலாம்.

துவங்கும் முன்பாக நீங்கள் அறிய வேண்டிய தகவல்:
பயனுள்ள, சிறந்த தரமுள்ள கட்டுரைகள்: கட்டுரை எழுத நீங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயம், கவரும் வகையிலும், அர்த்தம் பொதிந்த தலைப்புகளை கொண்டதாகவும், விஷயம் உள்ள கட்டுரையாகவும் இருக்க வேண்டும். நீங்கள் எதைப் பற்றி எழுதுகிறீர்களோ அதுபற்றி வாசகர்கள் புதிதாக நிறைய அறிந்துகொள்ளும் வகையில் கட்டுரை இருக்க வேண்டும். எழுத்தில் தெளிவும், அறிவுப்பூர்வ விஷயமும் (இலக்கண பிழை கூடாது) இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.
காப்பியடித்தலுக்கு நோ-நோ: பிற வெப்சைட்டோ அல்லது வேறு மூலங்களில் இருந்தோ கட்டுரை காப்பி செய்யப்பட்டதாக இருக்கவே கூடாது.

கட்டுரை வடிவம்: எழுத்து நடை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தமிழில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 700 வார்த்தைகள் இருப்பது அவசியம். (எஸ்எம்எஸ் மெசேஜ்களில் பயன்படுத்துவதை போன்ற வார்த்தை பிரயோகம் கூடாது)
ஏற்கனவே நமது வெப்சைட்டில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் கருப்பொருளை கொண்டே மீண்டும் கட்டுரை வழங்க கூடாது. வாசகர்களுக்கு போரடிக்கும் உணர்வை அது தரும் என்பதால் இந்த கட்டுப்பாடு. ஏற்கனவே பிரசுரமான கட்டுரையா என்பதை அறிய வெப்சைட்டின் மேல்பகுதியில் உள்ள சர்ச் ஆப்ஷனை பயன்படுத்தி அறியலாம்.
நீங்கள் ஏன் எங்களுக்காக எழுத வேண்டும் என கேட்கலாம்? உங்களது எழுத்து திறமையை காண்பிக்க இது ஒரு சரியான இடம். கணிசமான வருவாயையும் நீங்கள் பெற முடியும். உங்களது கட்டுரை அதிகப்படியானோரால் வாசிக்கப்பட்டால் உங்களுக்கு ஊக்கத்தொகையும் கிடைக்கும்.
உங்களுக்கு எழுத ஆர்வமுள்ள விஷயம் எது என்பதையும் எங்களுக்கு தெரிவியுங்கள்.
தொடர்புக்கு: www.lekhaka.com












Click it and Unblock the Notifications