ரோஸ்கர் மேளா' திட்டம்! 70,000 பேருக்கு காணொலி வாயிலாக பணி ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி
டெல்லி: 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் 'ரோஸ்கர் மேளா' திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் அமைச்சகங்களில் வரும் 2025ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில், இதனை ஓர் இயக்கம் போல கொண்டு செல்ல வெண்டும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து இது 'ரோஸ்கர் மேளா' திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Addressing the Rozgar Mela. Congratulations to the newly inducted appointees. https://t.co/MLd0MAYOok
— Narendra Modi (@narendramodi) June 13, 2023
இந்த திட்டத்தின்படி அவ்வப்போது இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார். தற்போது இதன் தொடர்ச்சியாக இன்று சுமார் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, பணி ஆணைகளை வழங்கியுள்ளார். ஆணையை பெற்ற இளைஞர்களிடம் கலந்துரையாடிய அவர், "சில அரசியல் கட்சிகள் அரசு வேலைக்காக விலையை நிர்ணயித்துள்ளன. ஆனால் பாஜக அப்படியான கட்சி அல்ல.
இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் நாங்கள் கவனமுடன் செயல்பட்டு வருகிறோம். அவர்களின் கனவுகளுக்காக நாங்கள் உழைக்கிறோம். அதேபோல நாட்டில் நிலையான ஆட்சி அதிகாரம் நீடித்து இருக்கவும் பாடுபட்டு வருகிறோம். தற்போது நமது நாட்டில் நிலையான அரசியல் சூழல் நிலவுகிறது. எந்த குழப்பமும், அதிருப்தியும் இல்லை. ஆனால் முந்தைய அரசாங்கங்கள் அப்படி இல்லை. பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் என ஏராளமான குற்றச்சாட்டுகள் முந்தைய அரசின் மீது இருந்தன" என்று கூறியுள்ளார்.

இந்த இளைஞர்கள் ஆன்லைன் மூலம் கர்மயோகி பிரம்ப் மூலம் பயிற்சிகளை பெறுவார்கள். நாடு முழுவதுமிருந்து நிதிச் சேவைத் துறை, அஞ்சல், பள்ளிக் கல்வி, உயர்கல்வி, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அணுசக்தி, ரயில்வே அமைச்சகம், தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் போன்ற துறைகளுக்கு பணியாற்ற இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த 16ம் தேதி இதே போல சுமார் 71 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications