அரசு வேலை தான் கனவா.. டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.. 327 பணியிடங்கள்! புதுவை அரசு அறிவிப்பு
சென்னை: புதுவை அரசு துறைகளில் காலியாக இருக்க கூடிய 327 காலிப்பணியிடங்களை நிரப்ப புதுவை சிஜிஎல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
யூனியன் பிரதேசங்களில் ஒன்றான புதுவையில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுவை (CGL) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்க கூடிய ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த காலிப்பணியிடங்களுக்கு புதுவையில் வசிக்க கூடியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்சம் புதுவையில் 5 ஆண்டுகள் வசித்து வருபவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:
* புள்ளியியல் ஆய்வாளர் - 26
* நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் - 25
* வேளாண் அலுவலர் - 23
* தொழில்நுட்ப அலுவலர் - 19
* வேளாண் அலுவலர் (பொறியியல்) - 05
* வேளாண் அலுவலர் (நீர்வளவியல்) - 05
* உயர்நிலை எழுத்தர் - 197
* கள மேற்பார்வையாளர் - 27
என மொத்தம் 327 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
* புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு பொருளாதாரம், புள்ளியியல், கணிதவியல் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
* நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் பணிக்கு நூலக அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
* விவசாய அதிகாரி பணிக்கு தோட்டக்கலைத்துறையில் பட்டம் முடித்து இருக்க வேண்டும்.
டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், இன்ஸ்ட்ரஷனல், புரடெக்ஷன் இன் ஜினியரிங், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் படித்து இருக்க வேண்டும்.
* உயர் நிலை எழுத்தர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தால் போதும்.
வயது வரம்பு:
புள்ளியியல் ஆய்வாளர் - 32 வயது வரை (அதிகபட்சம்)
நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் - 30 வயது
வேளாண் அலுவலர் - 30
தொழில்நுட்ப அலுவலர் - 30
வேளாண் அலுவலர் (பொறியியல்) - 30
வேளாண் அலுவலர் (நீர்வளவியல்) - 30
உயர் பிரிவு எழுத்தர் - 32
கள மேற்பார்வையாளர் - 30
அரசு விதிமுறைகளின் படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
https://recruitment.py.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்; 14.12.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க https://recruitment.py.gov.in/recruitment/AOH2025/RenderNotification
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications