அரசு வேலை தான் கனவா.. டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.. 327 பணியிடங்கள்! புதுவை அரசு அறிவிப்பு
சென்னை: புதுவை அரசு துறைகளில் காலியாக இருக்க கூடிய 327 காலிப்பணியிடங்களை நிரப்ப புதுவை சிஜிஎல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
யூனியன் பிரதேசங்களில் ஒன்றான புதுவையில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுவை (CGL) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்க கூடிய ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த காலிப்பணியிடங்களுக்கு புதுவையில் வசிக்க கூடியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்சம் புதுவையில் 5 ஆண்டுகள் வசித்து வருபவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:
* புள்ளியியல் ஆய்வாளர் - 26
* நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் - 25
* வேளாண் அலுவலர் - 23
* தொழில்நுட்ப அலுவலர் - 19
* வேளாண் அலுவலர் (பொறியியல்) - 05
* வேளாண் அலுவலர் (நீர்வளவியல்) - 05
* உயர்நிலை எழுத்தர் - 197
* கள மேற்பார்வையாளர் - 27
என மொத்தம் 327 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
* புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு பொருளாதாரம், புள்ளியியல், கணிதவியல் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
* நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் பணிக்கு நூலக அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
* விவசாய அதிகாரி பணிக்கு தோட்டக்கலைத்துறையில் பட்டம் முடித்து இருக்க வேண்டும்.
டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், இன்ஸ்ட்ரஷனல், புரடெக்ஷன் இன் ஜினியரிங், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் படித்து இருக்க வேண்டும்.
* உயர் நிலை எழுத்தர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தால் போதும்.
வயது வரம்பு:
புள்ளியியல் ஆய்வாளர் - 32 வயது வரை (அதிகபட்சம்)
நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் - 30 வயது
வேளாண் அலுவலர் - 30
தொழில்நுட்ப அலுவலர் - 30
வேளாண் அலுவலர் (பொறியியல்) - 30
வேளாண் அலுவலர் (நீர்வளவியல்) - 30
உயர் பிரிவு எழுத்தர் - 32
கள மேற்பார்வையாளர் - 30
அரசு விதிமுறைகளின் படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
https://recruitment.py.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்; 14.12.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க https://recruitment.py.gov.in/recruitment/AOH2025/RenderNotification
-
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
மதுரை ஏர்போர்ட் சர்வதேச விமான நிலையமாகிறது.. தேர்தல் நேரத்தில் மத்திய அரசு ஒப்புதல் -
இரவோடு இரவாக மாறிய ரூல்ஸ்.. சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு பெரிய ட்விஸ்ட்.. 2 முறை மாற்றம் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
டிரைவிங் லைசென்ஸ் எடுப்பவர்களுக்கு ஹேப்பி.. மத்திய அரசின் விதிமுறைகள்.. இனி RTO ஆபீஸ் போக வேண்டாம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்












Click it and Unblock the Notifications