ரயில்வே குரூப் டி தேர்வு.. அரசு வழங்கும் இலவச பயிற்சி வகுப்பு! பொன்னான வாய்ப்பு விட்றாதீங்க
சென்னை: இந்தியன் ரயில்வேயில் குரூப் டி -இல் 22,195 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழக இளைஞர்களும் தயாராகி வரும் நிலையில் அவர்களுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பிற்கு எப்படி சேர்வது என்பது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
மத்திய அரசின் மிகப்பெரிய நிறுவனமான இந்தியன் ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. மொத்தம் 22,195 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

குரூப் டியில் 22,195 பணியிடங்கள்
10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். 18 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் குரூப் 4 தேர்வு போல இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிப்பார்கள். இந்த பணிகளுக்கான சம்பளத்தை பொறுத்தவரை ரூ.18 ஆயிரம் முதல் வழங்கப்படும்.
சம்பளம் போக இதர சலுகைகளும் வழங்கப்படும் என்பதால் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களின் வசதிக்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இலவச பயிற்சி வகுப்பு
ரயில் ஆள்சேர்ப்பு வாரியம் (RRB) பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப்-டி தேர்விற்கான 22,195 காலிப்பணியிடங்கள் கொண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையதளம் 02.03.2026 ஆகும்.
எனவே, மேற்க்காணும் தேர்விற்காக வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் போட்டித் தேர்வர்கள் தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு மற்றும் இலவச மாதிரி தேர்வானது, அனுபவமிக்க சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 27.02.2026 வெள்ளிக்கிழமை அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற உள்ளது.
இலவச வை-பை, நூலக வசதி
இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வலுவலகத்தில் பள்ளிப் பாடபுத்தகங்கள் உட்பட 3000க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, படிப்பக வசதி, இலவச Wi-Fi மற்றும் இலவச கணினி பயன்படுத்தும் வசதிகள் போன்ற தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன.
சேர விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்
எனவே இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த https://rb.gy/xxudem இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு, இவ்வலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இவ்வலுவலக தொலைபேசி எண் 04342-288890 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இம்மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
மத்திய பாதுகாப்பு படையில் ஹெட் கான்ஸ்டபிள் வேலை.. 233 காலியிடங்கள்! 81 ஆயிரம் சம்பளம்! விட்றாதீங்க -
மாதம் 1 லட்சம் சம்பளத்தில் வங்கியில் வேலை.. பிஇ தகுதி தான்.. இன்னும் 2 நாள் தான் இருக்கு! -
IT Jobs: ரூ.8 லட்சம் வரை சம்பளம்.. வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. அசத்தலான சான்ஸ் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications