எழுத படிக்க தெரிந்தால் போதும்.. மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம்.. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை
ராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு தகுதி, எழுத படிக்க தெரிந்தால் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன்படி, ஊராட்சி ஒன்றிய அலுவலங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக காலியாக உள்ள இரவுக்காவலர் காலிப்பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி , வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

பணியிட விவரம்: மண்டபம் மற்றும் ஆர்.எஸ் மங்கலம் ஊராட்சிஅலுவலகத்தில் அலுவலக உதவியாளர் (01) மற்றும் இரவு காவலர் (01) பணியிடங்கள் நிரப்படுகின்றன. திருவாடனை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு இரவு காவலர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படி மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காவலர் பணிக்கு எழுத படிக்க தெரிந்தாலே போதும்.
சம்பளம் எவ்வளவு: சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படும். இனசுழற்சி அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது பூத்தியானவர்களும் 32 வயது மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. ஓபிசி பிரிவினர் 34 வயது வரையும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வி, இருப்பிட சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: தகுதியான விண்ணப்பதாரர்கள் அந்த ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றால் மாவட்டங்களை சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மற்றும் தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து https://ramanathapuram.nic.in/notice_category/recruitment/ தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 19.1.2024 ஆகும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. தேர்வு குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பானையில் தெரிந்து கொள்ளலாம்.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications