Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எழுத படிக்க தெரிந்தால் போதும்.. மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம்.. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு தகுதி, எழுத படிக்க தெரிந்தால் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன்படி, ஊராட்சி ஒன்றிய அலுவலங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக காலியாக உள்ள இரவுக்காவலர் காலிப்பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி , வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

Recruitment of Night Watchman office assistant in Ramanathpuram district Union office how to apply

பணியிட விவரம்: மண்டபம் மற்றும் ஆர்.எஸ் மங்கலம் ஊராட்சிஅலுவலகத்தில் அலுவலக உதவியாளர் (01) மற்றும் இரவு காவலர் (01) பணியிடங்கள் நிரப்படுகின்றன. திருவாடனை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு இரவு காவலர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படி மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்படுகின்றன.

கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காவலர் பணிக்கு எழுத படிக்க தெரிந்தாலே போதும்.

சம்பளம் எவ்வளவு: சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படும். இனசுழற்சி அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது பூத்தியானவர்களும் 32 வயது மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. ஓபிசி பிரிவினர் 34 வயது வரையும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வி, இருப்பிட சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: தகுதியான விண்ணப்பதாரர்கள் அந்த ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றால் மாவட்டங்களை சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மற்றும் தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து https://ramanathapuram.nic.in/notice_category/recruitment/ தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 19.1.2024 ஆகும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. தேர்வு குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பானையில் தெரிந்து கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+