4,660 காலியிடங்கள்.. ரயில்வே பாதுகாப்பு படையில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. அழைக்கும் ஆர்பிஎப்
சென்னை: ஆர்பிஎப் எனும் ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 4,660 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கு தொடக்கத்தில் மாதம் ரூ.35,400ம், கான்ஸ்டபிள் பணிக்கு ரூ.21,700 சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
ஆர்பிஎப் எனும் ரயில்வே பாதுகாப்பு படையில்(Railway Projection Force or RPF) காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம்.

காலியிடங்கள்: ரயில்வே பாதுகாப்பு படையில் மொத்தம் 4,660 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணி வாரியாக பார்த்தால் சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) பணிக்கு 452 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். கான்ஸ்டபிள் பணிக்கு 4,208 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். கான்ஸ்டபிள் பணிக்க விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 10ம் வகுப்பை பாஸ் செய்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 20 முதல் 28 வயதுக்குள்ளும், கான்ஸ்டபிள் பணிக்கு 18 முதல் 28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வயது வரையும் வயது தளர்வு என்பது வழங்கப்படும்.
மாத சம்பளம்: சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கு தொடக்கத்தில் மாதம் ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். கான்ஸ்டபிள் பணிக்க ரூ.21,700 சம்பளமாக வழங்கப்படும். அதன்பிறகு அரசு விதிகளின்படியும், ரயில்வே பாதுகாப்பு படையின் விதிகளின் படியும் ஆண்டுதோறும் சம்பள உயர்வு என்பது அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ எனும் இணைதயளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மே மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிபிடி தேர்வுக்கு பிறகு ரூ.400 திரும்ப வழங்கப்படும்.
எஸ்சி, எஸ்டி, முன்னாள் படை வீரர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்க விண்ணப்ப கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிபிடி தேர்வுக்கு பிறகு அந்த கட்டணம் திரும்ப வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் சிபிடி (Computer Based Test), உடல் திறன் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications