Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நோ எக்ஸாம்.. இன்டர்வியூ மட்டுமே! ரூ.45,000 வரை சம்பளம்! ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் சூப்பர் வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரீசால்வர் பணிக்கு சென்னை உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மாதசம்பளமாக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வழங்கப்படும்.

இந்தியாவில் முன்னணியில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் முறைப்படி நிரப்பப்பட்டு வருகின்றன.

 SBI recruitment for 94 Resolver post all over india including chennai

அந்த வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சென்னை உள்பட பல சர்க்கிள்களில் காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தற்போது ரீசால்வர் (Resolver) பணிக்கு 94 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் சென்னையில் 5 பேர் அண்டை மாநிலங்களில் உள்ள பெங்களூரில் 6 பேர், ஹைதராபாத்தில் 4 பேர், மும்பை மெட்ரோவில் 3 பேர், மகாராஷ்டிராவில் 6 பேர், திருவனந்தபுரத்தில் 2 பேர் உள்பட இந்தியா முழுவதும் மொத்தம் 92 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு & தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 60 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.11.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். பணிக்கு குறிப்பிட்ட கல்வி தகுதி எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பம் செய்வோர் எஸ்பிஐ-யில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருப்பதோடு, சிஸ்டம் குறித்த அறிவை பெற்றிருக்க வேண்டும்.

மாதசம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.45 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது. இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் sbi.co.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய நவம்பர் 21ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+