நோ எக்ஸாம்.. இன்டர்வியூ மட்டுமே! ரூ.45,000 வரை சம்பளம்! ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் சூப்பர் வேலை
சென்னை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரீசால்வர் பணிக்கு சென்னை உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மாதசம்பளமாக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வழங்கப்படும்.
இந்தியாவில் முன்னணியில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் முறைப்படி நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சென்னை உள்பட பல சர்க்கிள்களில் காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தற்போது ரீசால்வர் (Resolver) பணிக்கு 94 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் சென்னையில் 5 பேர் அண்டை மாநிலங்களில் உள்ள பெங்களூரில் 6 பேர், ஹைதராபாத்தில் 4 பேர், மும்பை மெட்ரோவில் 3 பேர், மகாராஷ்டிராவில் 6 பேர், திருவனந்தபுரத்தில் 2 பேர் உள்பட இந்தியா முழுவதும் மொத்தம் 92 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு & தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 60 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.11.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். பணிக்கு குறிப்பிட்ட கல்வி தகுதி எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பம் செய்வோர் எஸ்பிஐ-யில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருப்பதோடு, சிஸ்டம் குறித்த அறிவை பெற்றிருக்க வேண்டும்.
மாதசம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.45 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது. இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் sbi.co.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய நவம்பர் 21ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
IT JOBS: நாளை மதியம் சென்னையில் இண்டர்வியூ.. HCL-லில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. செம சான்ஸ் -
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
IT JOBS: மார்ச் 14ல் பெங்களூரில் இண்டர்வியூ.. பணி சென்னையில் தான்.. HCL தரும் சூப்பர் சான்ஸ் -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications