உலகளாவிய மின்மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பை விரைவுபடுத்த.. அதானி கிரீன் அழைப்பு!
லண்டன்: உலகளாவிய மின்மயமாக்கலை விரைவுபடுத்தவும், எரிசக்தி சேமிப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகளவில் பயன்படுத்தவும் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) கோரிக்கை விடுத்துள்ளது.
லண்டன் காலநிலை மாற்ற வாரத்தின் ஒரு பகுதியாக, லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற முதலாவது 'அதானி கிரீன் எனர்ஜி டயலாக்' நிகழ்வில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாகர் அதானி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசிய முக்கிய அம்சங்கள்
எரிசக்தி பாதுகாப்பு, மலிவு விலை மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு, எரிசக்தி சேமிப்பு வசதியுடன் கூடிய தூய்மையான மின்சாரம் மிகவும் அவசியமானது. உலகின் வளர்ந்து வரும் எரிசக்தி சவால்களை எதிர்கொள்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாக மின்மயமாக்கல் உருவெடுத்துள்ளது.
பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் (BESS) மற்றும் நீரேற்ற சேமிப்பு திட்டங்கள் (Pumped Storage Projects) போன்ற தொழில்நுட்பங்களுடன் இணையும் போது மட்டுமே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதன் முழு திறனை எட்டும்.
2030-ஆம் ஆண்டிற்குள் 50 ஜிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை எட்ட அதானி கிரீன் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. குஜராத்தின் காவ்டாவில் (Khavda) அமைக்கப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவில், பெரிய அளவிலான எரிசக்தி சேமிப்பு வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு (AI), மேம்பட்ட உற்பத்தித் துறை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்கள் (Data Centres) காரணமாக மின்சாரத்திற்கான தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது. எதிர்கால எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய நீண்ட கால கொள்கை உறுதிப்பாடு, தொடர்ச்சியான முதலீடுகள் மற்றும் மின் விநியோக உள்கட்டமைப்பை விரிவாக்குவது மிகவும் முக்கியம் என்றும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் அவர் பேசியதாவது, “ஆற்றல் பாதுகாப்பு, மலிவு விலை மற்றும் நிலைத்தன்மை ஆகியவை தற்போதைய காலகட்டத்தின் முக்கிய சவால்களாக விளங்குகின்றன. இந்த மூன்றையும் எதிர்கொள்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாக மின்மயமாக்கல் உருவெடுத்து வருகிறது. மீள் திறன் கொண்ட வளர்ச்சி மற்றும் அதிக ஆற்றல் சுதந்திரத்தை விரும்பும் நாடுகளுக்கு, மின்மயமாக்கலை விரைவுபடுத்துவது என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல, மாறாக அது ஒரு அவசியமான தேவை.
“பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் பம்ப் செய்யப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் போன்ற சேமிப்புத் தொழில்நுட்பங்களுடன் இணையும் போது மட்டுமே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதன் முழுத் திறனை எட்ட முடியும். குஜராத்தின் காவ்தாவில் உள்ள உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் மூலம், 2030 ஆம் ஆண்டிற்குள் 50 ஜிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்குவதை நோக்கி அதானி கிரீன் நிறுவனம் பயணித்து வருகிறது. அங்கு பெரிய அளவிலான ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பம் தூய்மையான மின் உற்பத்தியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
செயற்கை நுண்ணறிவு (AI), மேம்பட்ட உற்பத்தித் துறை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்கள் ஆகியவற்றின் காரணமாக அதிகரித்து வரும் மின்சாரத் தேவைக்கு, மீள்திறன் கொண்ட மற்றும் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட மின் அமைப்புகள் தேவைப்படும். எதிர்கால எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய நீண்டகால கொள்கை நிச்சயம், தொடர்ச்சியான முதலீடுகள் மற்றும் மின் கடத்தும் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியம் என இந்த மாநட்டில் பங்கேற்றிருந்தவர்கள் பேசியிருந்தனர்.
முன்னதாக, தங்களின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சேமிப்புத் திட்டங்களுக்கு கூட்டு சேர்க்கும் வகையில், இந்தியாவின் நீண்டகால ஆற்றல் பாதுகாப்பை வலுப்படுத்த 10 ஜிகாவாட் (GW) வரை அணுமின் திறனை மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications