Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு ஊழியராக சூப்பர் சான்ஸ்! 10 ம் வகுப்பு தகுதி.. 1075 பணியிடங்கள்! எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி, மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக சுமார் 14 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப எஸ்எஸ்சி அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

மத்திய அரசு ஊழியராக பணியில் சேர வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால், மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ் எஸ் சி வெளியிடும் தேர்வு அறிவிப்புகளை எதிர்பார்த்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராகி வருகிறார்கள்.

job Employment ssc

மத்திய அரசு ஊழியராக இருந்தால் கைநிறைய சம்பளம், சலுகைக்ள் உள்ளிட்டவை கிடைக்கும் என்பதால் மத்திய அரசு பணியில் சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் உள்ளது. எஸ் எஸ் சி தற்பொது புதிய தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

பணியிடங்கள் விவரம்:

எம்.டி.எஸ், ஹவில்தார் (CBIC and CBN) என 1075 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு:

எம்.டி.எஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18-வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 02.08.2000 க்கு முன்பாகவோ, 01.08.2007 க்கு பிறகோ பிறந்தவராக இருக்கக் கூடாது. ஹவில்தார் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர்கள் 02.08.1998 க்கு முன்பாகவோ 01.08.2007- க்கு பிறகோ பிறந்தவராக இருக்க கூடாது.

மத்திய அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் குறிபிட்ட பிரிவினருக்கு சலுகை அளிக்கப்படுகிறது. எஸ்.சி எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

சம்பளம்:

தற்போது உள்ள ஊதிய கமிஷன் படி லெவல் 1 நிலையில் உள்ள சம்பளம் கிடைக்கும். அதவது, ரூ.18 ஆயிரம் முதல் 56,900 வரை சம்பளமாக கிடைக்கும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியில் தேர்வு நடைபெறும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோஅவி, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், கிருஷணகிரி ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்ப்டும்

விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு தேர்வுக்கட்டணம் இல்லை. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 24 ஆம் தேதியாகும். தேர்வு நடைபெறும் மாதம் : செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 24 ஆம் தேதி வரை.

தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேர்வு அறிவிப்பினை படிக்கவும்: https://ssc.gov.in/home/apply

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+