8 ஆம் வகுப்பு தகுதி போதும்.. 40 ஆயிரம் வரை சம்பளம்.. அறநிலையத்துறையில் வேலை.. விண்ணப்பிக்க ரெடியா?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் காலியாக உள்ள 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எந்தெந்த பணியிடங்கள், விண்ணப்பிக்க தகுதி என்ன? போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இங்குள்ள காலிப்பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன. என்னென்ன தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை கீழே விரிவாக பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்: அர்ச்சகர், உதவி அர்ச்சகர், நாதஸ்வரம், தவில், மடப்பள்ளி, ஓதுவார், உதவி பரிசாரகர், இரவு காவலர், பகல் காவலர், திருவலகு, மின் பணியாளர், அலுவலக உதவியாளர் என மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித்தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும். மின் பணியாளர் பணியிடத்திற்கு ஐடிஐ அல்லது அரசால் அங்கீகரிக்கபட்ட நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெற்றிருத்தல் அல்லது மின் வாரியத்தால் வழங்கப்பட்ட உரிமம் பெற்றிருத்தல் ஆகியவை இருக்க வேண்டும். அதேபோல், அர்ச்சகர், தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட பணியிடத்திற்கான தகுதி விவரங்களை https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?: தபால் மூலம் மட்டுமே விண்ணபிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் அருள் தரும் முத்தாரம்மன் என்ற பக்கத்தில் கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ' செயல் அலுவலர், அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு 11.08.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தில் கோரப்பட்ட விவரங்களை சமர்பிக்காவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?: அலுவலக உதவியாளர் மற்றும் மின் பணியாளர் பணியிடத்திற்கு ரூ.12,600 முதல் 39,900 வரை சம்பளம் வழங்கப்படும். அதேபோல் நாதஸ்வரம் கலைஞர் பணியிடத்திற்கு 15,300 முதல் 48, 700 வரையும் அர்ச்சகர் பணியிடத்திற்கு 11,600 முதல் 36,800 வரையும் சம்பளமாக கொடுக்கப்படும். சம்பளம் பற்றிய முழு விவரங்களும் அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/38272/1948/document_1.pdf செய்யவும்.
-
இந்திய நர்ஸை.. ஆண்ட்டி என்று அழைத்த நபர்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! -
IT JOBS: 2026ல் படிப்பை முடித்தோருக்கு ஜாக்பாட்.. அலோவன்ஸ் + சம்பளத்துடன் வேலை தரும் Cognizant -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஏப்ரல் 18 ம் தேதி சென்னையில் இண்டர்வியூ -
IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் வேலை.. ஏப்ரல் 13ம் தேதி சென்னை எச்சிஎல்-யில் இண்டர்வியூ -
Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. 3-ம் கட்ட கலந்தாய்வு எப்போது? -
1.4 கோடி வரை சம்பளம்.. வீடியோ கேம் விளையாட தெரிந்தால்.. அமெரிக்காவில் லட்டு மாதிரி வேலை -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications