சென்னையில் பணி.. ரூ.50,000 டூ ரூ.70,000 வரை சம்பளம்! அழைக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் மாதம் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Tamil Nadu Pollution Control Board or TNPCB) செயல்பட்டு வருகிறது.

சென்னை கிண்டி மவுண்ட் சாலையில் இதன் அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் தாான் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ப்ராஜெக்ட் கோ ஆடிநேட்டர் லெவல் I பணிக்கு 2 பேர், ப்ராஜெக்ட் கோ ஆடிநேட்டர் லெவல் II பணிக்கு ஒருவர் என மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ப்ராஜெக்ட் கோ ஆடிநேட்டர் லெவல் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000 சம்பளம் வழங்கப்படும். ப்ராஜெக்ட் கோ ஆடிநேட்டர் லெவல் II மாதம் ரூ.50,000 சம்பளம் என்பது வழங்கப்படும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Environmental Science, Environmental Engineering, Environmental Biotechnology, Management உள்ளிட்ட படிப்புகளில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தேர்வாகும் நபர்கள் 12 மாதம் வரை பணியமர்த்தப்படுவார்கள்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 8 ம் தேதிக்குள் tnpcb.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து சுயசான்றொப்பமிட்ட (Self Attested) சான்றிதழ்களின் நகல்களுடன் Tamil Nadu Pollution Control Board, 76 Mount Salai, Guindy, Chennai 600 032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் எழுத்து தேர்வு என்பது இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications