சென்னை - பெங்களூர் - ஹைதரபாத்தில் நாளை மறுநாள் இண்டர்வியூ.. TCS தரும் சூப்பர் சான்ஸ்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜூலை 5ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.
பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services) எனும் டிசிஎஸ் சார்பில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் Sentinel Specialist பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் SOC டொமைனில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் SIEM இம்பிளேமென்டேஷனில் அனுபவம் இருக்க வேண்டும். டாக்குமென்டேஷன், டிசைன் டிபைனிங் ஆர்க்கிடெக்சர் டெவலப்மென்ட், டெஸ்ட்டிங், டெப்ளாய்மென்ட் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
Azure பிளாட்பார்மின் அடிப்படையை தெரிந்து வைத்திருக்க வேண்டம். Azure Sentinel basics அனுபவம் இருக்க வேண்டும். ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாரக இருக்க வேண்டும். கூடுதல் நேரம் பணியாற்றவும், ஏதாவது ஒரு புராஜெக்ட்டில் 24X7 என்று அளவில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் 4 முதல் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இதுதவிர ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டீமாக பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் டெக்னிக் தெரி்நதிரக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் மற்றும் மேனேஜிங் கிளைன்ட் திறமை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது பற்றி தற்போது எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே கீழே உள்ள லிங்க் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது ஒரு PAN India பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் நம் நாட்டின் எந்த ஊரில் வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னையிலும் கூட வேலை கிடைக்கலாம்.
இந்த பணிக்கான இண்டர்வியூ 3 இடங்களில் நடைபெற உள்ளது. சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நாளை மறுநாள் (ஜூலை 5) ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெற உள்ளது. பணியை விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூ லோகேஷன் உள்பட பிற விவரங்கள் தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications