தமிழகத்தில் ஆசிரியர் வேலை... ஹால் டிக்கெட் வெளியிட்டு டிஆர்பி முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2025ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அக்.12ம் தேதி நடத்தப்பட உள்ளது.. இத்தேர்வினை எழுத 236,530 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2025ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய 1,996 பணியிடங்களுக்கு அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு வரும் அக்டோபர் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு பலரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.02/2025, நாள் 10.07.2025 ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு எதிர்வரும் 12.10.2025 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 236,530 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் 30.09.2025 முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications